News August 21, 2025
38 மாவட்டங்களிலும்.. அரசு புதிய அறிவிப்பு

வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிக்கு TN அரசு டெண்டர் கோரியுள்ளது. 38 மாவட்டங்களில் சுமார் 35 லட்சம் வெளிமாநிலத்தவர்கள் பணியாற்றி வருவதாக தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில், *அவர்கள் தமிழகம் வருவதற்கான காரணம், *எங்கு உள்ளனர் *வாழ்க்கை நிலை *சுகாதார நிலை *என்ன பணி செய்கின்றனர் என்பதை கணக்கெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உங்கள் கருத்து?
Similar News
News January 18, 2026
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

ஸ்டாலின் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மாவட்ட MGR மன்ற இணை செயலாளர்கள் பிச்சை, M.முத்துராமன், நகர அம்மா பேரவை தலைவர் கண்ணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இதன் பின்னணியில், திமுகவில் ஐக்கியமான அதிமுக Ex அமைச்சர் அன்வர் ராஜா செயல்பட்டுள்ளார்.
News January 18, 2026
அரசு கஜானாவில் போதை பொங்கல்: அருண்ராஜ்

தமிழர்களின் இல்லங்களில் இன்பம் பொங்கியதோ இல்லையோ, அரசின் கஜானாவில் மது விற்பனை பணம் மட்டும் பொங்கி வழிந்துள்ளதாக அருண்ராஜ் விமர்சித்துள்ளார். 4 நாள்களில் ₹900 கோடி வரை மது விற்பனை நடந்துள்ளதாக கூறியுள்ள அவர், ‘மனமகிழ் மன்றங்கள்’ வழியாக கள்ள மது விற்பனை ஆறாக ஓடியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கொல்லைப்புறமாக மது விற்பனையை பெருக்குவதுதான் திடாவிட மாடல் ஆட்சியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 18, 2026
பாஜகவுக்கு எத்தனை சீட்: இன்று முடிவாகிறதா?

PM மோடியின் TN வருகைக்கு முன் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என TN பாஜக தேர்தல் பொறுப்பாளர் <<18874134>>பியூஷ் கோயல்<<>> அறிவித்திருந்தார். இந்நிலையில், 2 நாள் பயணமாக இன்று அவர் சென்னை வருகிறார். NDA கூட்டணி கட்சிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ள அவர், இன்றே அதிமுகவுடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜக 50 தொகுதிகள் வரை கேட்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


