News December 8, 2024
குடும்பத்தினருடன் பேச கைதிகளுக்கு புது வசதி

மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், அவர்களது குடும்பத்தினருடன், கணினி திரை வாயிலாக வீடியோ அழைப்பில் பேசும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை புழல், வேலூர், கோவை, திருச்சி, பாளையங்கோட்டை உட்பட 9 மத்திய சிறைகளில் இந்நடைமுறை அமலாகியுள்ளது. கைதிகள் 3 நாள்களுக்கு ஒருமுறை குடும்பத்தினருடன் 12 நிமிடம் கணினி மூலம் வீடியோ அழைப்பில் பேசலாம். ஒரு நிமிடத்திற்கு ₹2.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Similar News
News March 26, 2026
பொன்முடிக்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும்படி, பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் சம்மன் அனுப்பி இருந்தது. இதை எதிர்த்து அவரது தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணைக்கும் பொன்முடி நேரில் ஆஜராவதற்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
News March 26, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. கடைசியாக அறிவித்தார்

NDA கூட்டணியில் புதிதாக சிங்கத் தமிழர் கட்சி இணைந்துள்ளது. இன்று அக்கட்சியின் தலைவர் ஆர்.வி.பரதன் EPS-ஐ சந்தித்து முழு ஆதரவை தெரிவித்த நிலையில், அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பரதன் மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் ஆகிய 2 தொகுதிகளில் ஒன்றை ஒதுக்க கேட்டிருப்பதாகவும், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
இந்தியாவை நோக்கி வரும் 8 லட்சம் மெட்ரிக் டன் LPG

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு பற்றிய வதந்திகளை நம்பி பங்க்குகளில் பொதுமக்கள் திரளவேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கான கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா உறுதி செய்திருப்பதாகவும், US, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து 8 லட்சம் மெட்ரிக் டன் LPG கப்பல்கள் மூலம் வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


