News April 25, 2025
விண்ணப்பித்த 3 நாளில் புதிய மின்சார இணைப்பு: அரசு

உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த 3 நாள்களில் புதிய மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்பு வழங்குவதில் EB-க்கு தனிவிதிமுறைகள் உள்ளதாகவும், அதன்படிதான் மின்சார இணைப்பு வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 27 லட்சம் மின்சார இணைப்புகள் வழங்கி தமிழகம் சாதனை படைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 25, 2025
பெரம்பலூர்: செம்மொழி நாள் போட்டிகள் ஆட்சியர் அறிவிப்பு

11,12 வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான செம்மொழி நாள் கட்டுரை, பேச்சுப்போட்டி மே 9,10 தேதியில் நடைபெறுகிறது,போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தை https://tamilvalarchithurai.in.gov.inபதிவிறக்கம் செய்து பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியரிடமும், கல்லூரி மாணவர்கள் முதல்வரிடமும் பரிந்துரைக்கடிதத்துடனும் 05.05.2025 நாளுக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
News April 25, 2025
சாகும் வரை காத்திருந்த தீவிரவாதி

தனது கணவரை சுட்டுவிட்டு, அவர் சாகும் வரை காத்திருந்து, பின்னரே தீவிரவாதி அங்கிருந்து சென்றதாக பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட ம.பி.யைச் சேர்ந்த சைலேஷின் மனைவி ஷீதல் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் சென்ற பிறகும் கூட தங்களுக்கு உடனடி உதவி கிடைக்கவில்லை எனவும், சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ராணுவ வீரரிடம் இது பற்றி சொன்னபோது, ஏன் இங்கு வந்தீர்கள் என அவர் கடிந்து கொண்டதாகவும் ஷீதல் கூறியுள்ளார்.
News April 25, 2025
பிடிஆருக்கு செந்தில் பாலாஜி இலாகா? அப்போ அவர்?

தன்னிடம் போதிய அதிகாரமும் இல்லை, தனது துறைக்கு நிதியும் இல்லை என பேரவையிலேயே பேசினார் அமைச்சர் பிடிஆர். இதனால் அதிருப்தியில் உள்ள திமுக தலைமை, செந்தில் பாலாஜி வசம் உள்ள மின்சாரம், மதுவிலக்கு துறையை பிடிஆருக்கு கூடுதல் இலாகாவாக அளிக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, <<16197163>>SC-ன்<<>> கிடுக்குப்பிடியால் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.