News October 20, 2024

குழந்தைகள் மத்தியில் புது வியாதி: VP

image

குழந்தைகள் மத்தியில் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற புது வியாதி வந்துள்ளதாக துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். நடப்பு ஆண்டில் சுமார் 13 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், கல்வி வணிகமாக மாறுவது தேசத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கையை ‘கேம் சேஞ்சர்’ எனவும் பாராட்டியுள்ளார்.

Similar News

News July 5, 2025

தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

image

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News July 5, 2025

BREAKING: இபிஎஸ்-க்கு Z+ பாதுகாப்பு

image

இபிஎஸ்-க்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் துப்பாக்கி ஏந்திய 10 NSG கமாண்டோக்கள், 55 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அண்மையில் இபிஎஸ்-க்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் இரு முறை கொலை மிரட்டல் விடுத்தது கவனிக்கத்தக்கது.

News July 5, 2025

வாட்டர் பெல்: பெற்றோர் முக்கிய வேண்டுகோள்

image

‘வாட்டர் பெல்’ எனும் திட்டம் தமிழக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பல மாணவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் நீர் பருகுவதால், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஸ்டீல் (அ) செம்பு பாட்டில்களைக் கொண்டுவர அரசு பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரம், தமிழை வளர்க்கும் தமிழக அரசு ‘தண்ணீர் மணி’ என்று திட்டத்தின் பெயரை மாற்ற பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!