News August 9, 2024

நெல்லைக்கு புதிய துணை காவல் ஆணையர்

image

நெல்லை மாவட்ட புதிய துணை காவல் ஆணையராக விஜயகுமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மதுரை ஊழல் தடுப்பு பிரிவில் கூடுதல் எஸ்.பி.யாக இருந்தார். தற்போது எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று நெல்லை துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண், தற்போது மணிமுத்தாறு 12வது சிறப்பு காவல் படை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News November 3, 2025

நெல்லை: பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு

image

நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் அடுத்த 2026 – 27ம் கல்வி ஆண்டில் ஐஐடி என்ஐடி உள்ளிட்ட உயர்த்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பிஇ, பி டெக் சேர்க்கைக்கு ஜே இ இ மெயின் தேர்வுக்கு நவம்பர் 27ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.nta.ac.in இன்று இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு மைய விவரம் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

News November 3, 2025

நெல்லை: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

image

நெல்லை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்<>கு க்ளிக் <<>>செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News November 3, 2025

நெல்லை: முன்னாள் எஸ்.ஐ மகனுக்கு கொலை மிரட்டல்!

image

நெல்லை டவுனை சேர்ந்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி, வக்பு நிலப்பிரச்சினையில் கடந்த மார்ச் மாதம் கொலை செய்யபட்டார். பிஜிலியின் மகன் இஜூர் ரகுமான் பிஜிலிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக அவரது மனைவி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது மகனுக்கு ஆபத்து இருப்பதாகவும், நிலம் குறித்து முறையான விசாரணை நடத்தி, முதல்வர் நியாயம் வழங்க கோரியுள்ளார். இதுக்குறித்து டவுன் போலீசார் விசாரணை.

error: Content is protected !!