News August 9, 2024
நெல்லைக்கு புதிய துணை காவல் ஆணையர்

நெல்லை மாவட்ட புதிய துணை காவல் ஆணையராக விஜயகுமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மதுரை ஊழல் தடுப்பு பிரிவில் கூடுதல் எஸ்.பி.யாக இருந்தார். தற்போது எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று நெல்லை துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண், தற்போது மணிமுத்தாறு 12வது சிறப்பு காவல் படை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News December 2, 2025
நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை மாத சோமவாரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்பாள் கோயிலில் கார்த்திகை மாத மூன்றாம் சோமவார தினத்தை முன்னிட்டு நேற்று தாமிர சபையில் வைத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
News December 2, 2025
எஸ் ஐ ஆர் புதிய கால அட்டவணை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கணக்கீட்டிற்கான நாள் டிசம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் 16ஆம் தேதி வெளியிடப்படுகிறது. விசாரணை சரிபார்ப்பு 16 முதல் ஜனவரி 15 வரை நடக்கிறது. இதற்கான பட்டியல் விவரத்தை நெல்லை மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பார்வைக்கு இன்று வெளியிட்டுள்ளது.
News December 2, 2025
எஸ் ஐ ஆர் புதிய கால அட்டவணை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கணக்கீட்டிற்கான நாள் டிசம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் 16ஆம் தேதி வெளியிடப்படுகிறது. விசாரணை சரிபார்ப்பு 16 முதல் ஜனவரி 15 வரை நடக்கிறது. இதற்கான பட்டியல் விவரத்தை நெல்லை மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பார்வைக்கு இன்று வெளியிட்டுள்ளது.


