News August 9, 2024
நெல்லைக்கு புதிய துணை காவல் ஆணையர்

நெல்லை மாவட்ட புதிய துணை காவல் ஆணையராக விஜயகுமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மதுரை ஊழல் தடுப்பு பிரிவில் கூடுதல் எஸ்.பி.யாக இருந்தார். தற்போது எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று நெல்லை துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண், தற்போது மணிமுத்தாறு 12வது சிறப்பு காவல் படை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News November 20, 2025
நெல்லை: மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே பசுக்கிடை விளை காமராஜர் மேற்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் செஞ்சி லெட்சுமி (57). இவருக்கு நீரழிவு நோய் அதிகமாக அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டை விட்டு வெளியே வரும்போது தலைசுற்றி மாடியில் இருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 20, 2025
நெல்லை: ரயில்வே வேலை., மீண்டும் ஒரு வாய்ப்பு! APPLY

நெல்லை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.இதற்கு நவ. 20 (இன்று) கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News November 20, 2025
நெல்லை: மின் கம்பத்தில் மோதி புது மாப்பிள்ளை பலி

திருப்புடைமருதூரை சேர்ந்தவர் சங்கர் (29). இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு பணிபுரிந்து பைக்கில் வீட்டிற்கு சென்ற போது வெள்ளாங்குழி உப்பூர் பகுதியில் மின் கம்பத்தில் பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


