News August 26, 2024
பார்களுக்கு புதிய கட்டுப்பாடு

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் உள்ள பார்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காரில் மது அருந்த வருவோருக்கு ஓட்டுநர் இல்லை எனில், அதற்கு பார் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். மது போதையில் இருப்பவர்களை, நம்பகத்தன்மை உள்ள வாகனத்தில் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. இதை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என மது பிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்
Similar News
News March 24, 2026
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசு: அன்புமணி

மத்திய அரசை எதிர்த்தால் எதுவும் கிடைக்காது என்று அன்புமணி திமுகவை விமர்சித்துள்ளார். மத்திய அரசும் மாநில அரசும் ஒரே கூட்டணி அமைத்தால் மாநிலத்துக்கு நல்லது என்றும் திமுக மத்திய அரசை எதிர்ப்பதால் தமிழ்நாட்டுக்கு கட்டுமானங்கள், நிதியுதவி உள்ளிட்டவை கிடைக்காது என்றும் கூறியுள்ளார். மேலும், பாஜக, டெல்லியை குறைசொல்வது என்பது பயந்த முதலமைச்சர் மற்றும் திமுகவின் பேச்சு என்று கடுமையாக சாடியுள்ளார்.
News March 24, 2026
திமுகவுக்கு சாதகமாக தேர்தல் அதிகாரிகள்: செல்லூர் ராஜு

தேர்தல் கண்காணிப்பு குழுவில் திமுக தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை நியமித்துள்ளதாக செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார். எந்த அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்ற பட்டியலை எடுத்து வருவதாகவும், அதை EPS மூலம் ECI-யிடம் கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவே தேர்தல் விதிமுறைகளை மீறுவதற்கான வாய்ப்பிருப்பதாக மதுரை ஆட்சியர் மற்றும் ஆணையரை இடமாற்றம் செய்யக்கோரி பாஜகவினர் ECI-யிடம் மனு அளித்துள்ளனர்.
News March 24, 2026
DCM உதயநிதி காரில் சோதனை

கரூரில் இருந்து திண்டுக்கல் சென்ற DCM உதயநிதி காரை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தனர். திண்டுக்கல்லில் இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றபோது வேடசந்தூரை அடுத்த கல்வார்பட்டி சோதனை சாவடியில் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் காவல்துறையினர் உதவியோடு தேர்தல் கண்காணிப்பு குழு தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


