News February 18, 2025
புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய CEO ராஜீவ்குமாரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, புதிய CEO ஞானேஷ்குமார் நாளை பதவியேற்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல், 2026 TN, KL, WB, அசாம், புதுச்சேரி தேர்தல், 2027 UP, குஜராத் உள்பட 6 மாநில சட்டமன்றத் தேர்தல் 2029 நாடாளுமன்றத் தேர்தல் இவரது தலைமையில் நடைபெறவுள்ளது.
Similar News
News October 16, 2025
குஜராத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா

குஜராத்தை ஆளும் பாஜக அரசின் 16 அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை CM பூபேந்திர படேலிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக CM பூபேந்திர படேல், இன்றிரவு ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். புதிய அமைச்சரவையில் இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
News October 16, 2025
ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?

நமக்கு தினசரி கிடைக்கும் சத்துகள் நிறைந்த உணவு முட்டை தான். இதில் சுமார் 7 கிராம் புரோட்டீன், வைட்டமின் A, B, B12, ஃபோலேட், இரும்பு மற்றும் செலினியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. எனவே, ஒருவர் தினசரி 2 முதல் 3 முட்டைகள் (மஞ்சள் கருவுடன்) சாப்பிடலாம். பலரும் மஞ்சள் கருவை தவிர்க்கின்றனர். ஆனால் மஞ்சள் கருவில்தான் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்கள்.
News October 16, 2025
ரூபாய் மதிப்பை சந்தை தீர்மானிக்கும்: RBI கவர்னர்

இந்தியா, ஒரு குறிப்பிட்ட நாட்டின் கரன்சி மதிப்பை இலக்காக கொண்டு செயல்படவில்லை என்று RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் வர்த்தக கொள்கைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, ரூபாய் மதிப்பு வீழ்ச்சிப் போக்கில் இருந்து வருகிறது. இந்நிலையில், ரூபாயின் மதிப்பை சந்தைகளே தீர்மானிக்க வேண்டும் என தான் நம்புவதாக சஞ்சய் மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.