News February 18, 2025
புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய CEO ராஜீவ்குமாரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, புதிய CEO ஞானேஷ்குமார் நாளை பதவியேற்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல், 2026 TN, KL, WB, அசாம், புதுச்சேரி தேர்தல், 2027 UP, குஜராத் உள்பட 6 மாநில சட்டமன்றத் தேர்தல் 2029 நாடாளுமன்றத் தேர்தல் இவரது தலைமையில் நடைபெறவுள்ளது.
Similar News
News November 23, 2025
அஜித்தை பாராட்டிய செல்வப்பெருந்தகை

கார் ரேஸிங்கில் விருதுகளை குவித்துவரும் அஜித்துக்கு, <<18364909>>GENTLEMAN DRIVER OF THE YEAR 2025<<>> விருது மேலும் ஒரு மகுடமாக அமைந்திருக்கிறது. அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த செல்வப்பெருந்தகை, தன்னம்பிக்கை, கடின உழைப்புதான் வெற்றியின் அடித்தளம் என்பதை அவர் மீண்டும் நிரூபித்திருப்பதாக பாராட்டியுள்ளார். அஜித்தின் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 23, 2025
உங்க குழந்தை உயரமா வளரணுமா? இத கொடுங்க..

உங்கள் குழந்தை வயதுக்கேற்ற உயரத்துடன் வளரவில்லை என கவலையா? டாக்டர்கள் பரிந்துரைக்கும் இந்த பவுடரை வீட்டிலேயே அரைத்து கொடுத்து பாருங்கள். ▶முதலில், ஆளி விதை, பாதாம், வால்நட்ஸ், பூசணி விதை & தேங்காயை ஒரு பாத்திரத்தில் வறுக்கவும். ▶அதை நன்றாக அரைத்து, கோகோ பவுடர் சேர்த்து கலக்கவும். ▶இதை தூங்குவதற்கு முன், பாலில் கலந்து கொடுக்கவும். இதில் உள்ள ஊட்டச்சத்து குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். SHARE.
News November 23, 2025
நாளை பள்ளிகளுக்கு 3 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படாது என அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதுமட்டுமின்றி, மேலும் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், விடுமுறை தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம்.


