News September 2, 2025
பழங்குடியின மொழிகளை பாதுகாக்க புதிய AI செயலி

பழங்குடியின மக்களின் மொழிகளைப் பாதுகாக்க ஆதி வாணி என்ற AI செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கோண்டி, பிலி, முண்டாரி போன்ற பழங்குடியின மொழிகளை, இந்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திறன் கொண்டது. இந்த செயலி. பழங்குடியின கதைகள், வாய்மொழி மரபுகள், கலாச்சாரப் பாரம்பரியங்கள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக உதவும். நாட்டின் பன்முகத்தன்மையை பறைசாற்றவும் இச்செயலி உறுதுணையாக இருக்குமாம்.
Similar News
News September 2, 2025
BREAKING: அதிமுகவில் மீண்டும் சசிகலா, OPS.. புதிய தகவல்

செப்.5-ம் தேதி மனம் திறந்து பேசப் போவதாக தெரிவித்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், புதிய திட்டத்தை தீட்டி வருகிறாராம். ஒருங்கிணைந்த அதிமுகவை மீண்டும் கட்டமைக்க, அவர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சசிகலா, OPS இருவரும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்துதான் செங்கோட்டையனும் 5-ம் தேதி பேச உள்ளாராம். இதற்கு EPS சம்மதம் தெரிவிப்பாரா?
News September 2, 2025
பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் பின்தங்கிய இந்தியா

பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் 17 ஆண்டுகளாக ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அமைதி குறியீட்டு அறிக்கையின்படி, அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், போர்ச்சுகல், டென்மார்க், ஸ்லோவேனியா, பின்லாந்து ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன. இதில் இந்தியா 115-வது இடத்திலும், பாக்.,144-வது இடத்திலும் உள்ளன. 163 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் ரஷ்யா கடைசி இடத்தில் உள்ளது.
News September 2, 2025
ஆசிரியர்களை அரசு கைவிடாது: அன்பில் மகேஸ் திட்டவட்டம்

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் தொடர TET தேர்வு கட்டாயம் என்று <<17579658>>உச்சநீதிமன்றம் <<>>
நேற்று தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் அரசு எக்காரணம் கொண்டும் ஆசிரியர்களை கைவிடாது என அமைச்சர் அன்பில் மகேஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் தீர்ப்பு முழுமையாக வந்தவுடன், அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்படும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.