News August 10, 2025
ஆயுத உற்பத்தியில் புதிய சாதனை

இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2024-25-ம் ஆண்டில் ₹1.50 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ₹1.27 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 18% அதிகரித்துள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனங்கள் 77%, தனியார் நிறுவனங்கள் 23% பங்களிப்பை செய்துள்ளன.
Similar News
News August 10, 2025
சங்கை அறுப்போம்… கமலுக்கு துணை நடிகர் கொலை மிரட்டல்

சனாதனத்துக்கு எதிராக பேசிய கமல்ஹாசனின் சங்கை அறுப்போம் என துணை நடிகர் ரவிச்சந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவரும் ஓய்வு பெற்ற ஐஜி-யுமான மவுரியா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அகரம் நிகழ்ச்சியில் பேசிய கமல் சனாதன சங்கிலிகளை உடைக்கும் ஒரே ஆயுதம் கல்வி என கமல் கூறியிருந்தார்.
News August 10, 2025
பாக்சிங் ரிங்கில் பலியான 2 வீரர்கள்… சோகம்!

ஜப்பானில் பாக்சிங் போட்டியில் 2 வீரர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2-ம் தேதி நடந்த ஒரு போட்டியில், ஷிகெடொஷி கொட்டாரி(28) என்ற வீரர் 12 ரவுண்டுகள் நீடித்த கடுமையான போட்டியில் காயமடைந்து உயிரிழந்தார். அடுத்த நாள் மற்றொரு போட்டியில் ஹிரோமசா உரகாவா(28) என்ற வீரர் அடிப்பட்டு இறந்தார். இந்த இருவருமே தலையில் அடிப்பட்டு மூளை காயமடைந்ததால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. RIP
News August 10, 2025
நாளை வங்கிக் கணக்கில் பயிர்க் காப்பீட்டு தொகை

PM ஃபசல் பிமா திட்டத்தின் கீழ், பயிர்க் காப்பீடு தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை டெபாசிட் செய்யப்படும். இதற்காக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ₹3,200 கோடி தொகையை விடுவிப்பார். நாடு முழுவதும் 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் இத்திட்டத்தில், அதிகபட்சமாக ம.பி.,க்கு ₹1,156 கோடி, ராஜஸ்தானுக்கு ₹1,121 கோடி, சத்தீஸ்கருக்கு ₹150 கோடி, இதர மாநிலங்களுக்கு ₹773 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.