News January 23, 2025

புதிய 350 ரூபாய் நோட்டுகளா? உண்மை இதுதான்

image

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் புதிய ₹2000, ₹500, ₹200, ₹100, ₹50 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், ₹2000 நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டது. இந்நிலையில், புதிதாக ₹350 மற்றும் ₹5 நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆனால், இதுபோன்ற புதிய ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ வெளியிடவில்லை. இவை அனைத்தும் போலியான புகைப்படங்கள்.

Similar News

News December 13, 2025

மெஸ்ஸியை சந்திக்கிறாரா ராகுல் காந்தி?

image

‘GOAT இந்தியா டூர்’ நிகழ்வின் ஒரு பகுதியாக மெஸ்ஸி இன்று ஹைதராபாத் செல்கிறார். அங்கு, CM ரேவந்த் ரெட்டி தலைமையிலான கால்பந்து அணி, மெஸ்ஸி தலைமையிலான அணியுடன் நட்பு போட்டியில் விளையாடுகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போட்டிக்கு முன்னதாக ராகுல், மெஸ்ஸியை அவர் தங்கும் அரண்மனைக்கே சென்று சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

News December 13, 2025

தமிழ் நடிகை மரணம்… பரபரப்பு தகவல்

image

நடிகை ராஜேஸ்வரியின் தற்கொலைக்கான காரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. <<18549358>>பணப்பிரச்னை<<>> தொடர்பாக கணவன் சதீஷுடன் ஏற்பட்ட மோதலே அவரது மரணத்திற்கு காரணம் என முதலில் தகவல் வெளியாகியிருந்தது. தற்போது புதிய திருப்பமாக, நடிப்புத் தொழிலை கைவிடுமாறு கணவன் முட்டுக்கட்டை போட்டதே ராஜேஸ்வரியின் மரணத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

News December 13, 2025

ரொம்பவே Overthinking பண்ற ஆளா நீங்க.. இத கேளுங்க!

image

ஒரு விஷயத்தை அதிகமாக யோசிச்சிட்டே இருக்கீங்களா? இந்த Overthinking-ஆல் மனரீதியிலான பிரச்னை மட்டுமின்றி, உடல் சோர்வு, தலைவலி, செரிமான பிரச்னையும் உண்டாகும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதிலிருந்து விடுபட தியானம், பிடித்தவர்களிடம் மனம்விட்டுப் பேசுவது பலனளிக்கும் என மனநல டாக்டர்கள் சொல்கின்றனர். அதே போல, Overthinking-ல் சிக்கி தவிப்பவர்களுக்கு மியூசிக் நல்ல மருந்தாக அமையும் எனவும் கூறுகின்றனர்.

error: Content is protected !!