News April 5, 2025
புதிய ₹500, ₹10 ரூபாய் நோட்டுகள்: RBI அறிவிப்பு

₹500 மற்றும் ₹10 கரன்சி நோட்டுகள் புதிதாக வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. காந்தி படங்கள் கொண்டிருக்கும் தற்போதைய கரன்சி நோட்டின் வடிவமைப்பில் எந்த மாற்றமும். ஆனால், புதிதாக ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்றுள்ள சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்து புதிய நோட்டுகளில் இடம்பெறும். பழைய நோட்டுகளும் செல்லும். ₹100, ₹200 நோட்டுகளும் கூட விரைவில் மல்ஹோத்ரா கையெழுத்துடன் வெளியாக உள்ளன.
Similar News
News December 18, 2025
சேலம்: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்!

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிருந்தா தேவி தலைமையில், குழந்தைகள் உரிமைகள் ஆணைய தலைவர் விஜயா முன்னிலையில், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்கள், சிறப்பு சிறார் காவல் உதவி பிரிவு ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு, மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆகியோருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குழந்தை நேய முறையில் அணுகுதல் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
News December 18, 2025
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குக: CM ஸ்டாலின்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரால் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக் கோரி, CM ஸ்டாலின் ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கலைஞர் பல்கலை., விளையாட்டு பல்கலை., மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குமாறும் ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை ஜனாதிபதியின் செயலரிடம் டி.ஆர்.பாலு உள்ளிட்ட INDIA கூட்டணி MP-க்கள் வழங்கினர்.
News December 18, 2025
EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

கோபியில் அதிமுக உள்ளிட்ட பிற கட்சி நிர்வாகிகளை தவெகவில் இணைக்கும் பணிகளை செங்கோட்டையன் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, கோபி தொகுதியில் அதிமுகவை பலப்படுத்த EPS முனைப்பு காட்டி வருகிறார். உழவர் உழைப்பாளர் கட்சியின் மகுடேஸ்வரன் உள்பட கோபி தொகுதியில் இருந்து, 75-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். தேர்தல் பணிகளில் முழுவீச்சில் செயல்படுமாறு அவர்களுக்கு EPS அறிவுறுத்தியுள்ளார்.


