News September 28, 2025
ரஜினியை வம்புக்கு இழுக்கும் நெட்டிசன்ஸ்

விஜய்யின் அரசியல் பயணத்தில், நேற்று நடந்த துயர சம்பவம் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களுக்கு கொள்கை முக்கியமல்ல, தங்கள் நாயகனை ரசிப்பது மட்டுமே முதன்மை. அதனாலேயே நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறினாலும், ரசிகர்கள் ரசிகர்களாகவே தொடர்கின்றனர். இதை நன்கு உணர்ந்ததால் தான், பழுத்த அனுபவம் கொண்ட கட்சிகளுடன் எதற்கு போட்டி என ரஜினி ஒதுங்கிவிட்டதாக நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
Similar News
News September 28, 2025
ஆம்புலன்ஸை தவெக தொண்டர்கள் தாக்கினர்: மா.சு.

கரூர் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்த போது, அதை அனுமதிக்க மறுத்து, தவெக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸை வழிமறித்து தவறான மன ஓட்டத்தை புகுத்தியவர் EPS எனவும், தவெக தொண்டர்களை இந்த மனநிலைக்கு மாற்றிய அவரே இதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், இத்தகைய பேரிடரிலும் EPS அரசியல் செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.
News September 28, 2025
விஜய்யை தாக்கி பேசிய பதிவு.. சர்ச்சைக்கு கயாது விளக்கம்

கரூர் கூட்ட நெரிசலில் எனது நண்பரை இழந்துவிட்டேன். விஜய் சுயநல அரசியல் செய்து வருகிறார் என நடிகை கயாது லோஹர் பெயரிலான X தள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், அது போலி கணக்கு, அதில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், கரூரில் தனக்கு நண்பர்கள் யாரும் இல்லை எனவும், அந்த சம்பவத்தால் அதிகம் வருத்தமடைந்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
News September 28, 2025
PM மோடியை சந்தித்த துணை ஜனாதிபதி CPR!

டெல்லியில், PM மோடியை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது, கரூரில் நிகழ்ந்த துயரம் தொடர்பாக PM மோடி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சி.பி. ராதாகிருஷ்ணனுடன், பலதரப்பட்ட விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக PM மோடி தனது X பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்.