News April 13, 2024

மேக்ஸ்வெல்லை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

image

RCB வீரர் மேக்ஸ்வெல் நடப்பு ஐபிஎல்லில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் 3 போட்டிகளில் டக் அவுட்டாகியுள்ளார். இவர் மோசமாக விளையாடி வருவதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலே உள்ள படத்தை பார்த்தால் மேக்ஸ்வெல்லை எப்படியெல்லாம் கிண்டல் செய்துள்ளார்கள் என்பது உங்களுக்கே புரியும்.

Similar News

News December 31, 2025

EX வங்கதேச PM இறுதி சடங்கில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்

image

நாளை நடைபெற உள்ள EX வங்கதேச PM ஹலிதா ஜியாவின் இறுதி சடங்கில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவு தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. <<18716289>>ஹலிதாவின்<<>> 10 ஆண்டுகால ஆட்சியில், இந்தியாவிற்கு எதிராக அரசியல் செய்ததும், வங்கதேசத்தின் முன்னணி ஆயுத விற்பனையாளராக சீனா உருவெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

News December 31, 2025

IPL-ல் ₹13 கோடி.. ஆனால் தேசிய அணியில் இடமில்லை!

image

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனை SRH அணி ₹13 கோடி என்ற பெரும் தொகைக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், 2026 டி20 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் அவர் இடம்பெறாதது பேசுபொருளாகியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு ஹேரி புரூக் கேப்டனாக தலைமை தாங்க உள்ளார். துணை கேப்டனாக யாரும் நியமிக்கப்படவில்லை. 2026 பிப்ரவரியில் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது.

News December 31, 2025

திருத்தணி கொடூரத்தை கண்டு நெஞ்சம் பதறுகிறது: பா.ரஞ்சித்

image

திருத்தணியில் நடந்த கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுவதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்க தவறிய ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே இதற்கு காரணம் எனவும், வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!