News January 23, 2025

நேதாஜியின் தியாகத்தை ஈடுசெய்ய முடியாது: மோடி

image

நாட்டின் சுதந்திரத்திற்காக நேதாஜி அளித்த பங்களிப்பை எதனாலும் ஈடுசெய்ய முடியாது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நேதாஜியின் பிறந்ததினத்தையொட்டி அவர் பதிவிட்டுள்ளார். அதில், பராக்ரம தினமான இன்று நேதாஜிக்கு தனது வணக்கத்தை செலுத்துவதாக கூறியுள்ளார். அவரது தொலைநோக்கு பார்வை தங்களுக்கு உத்வேகமாக இருப்பதாகவும், அவர் கண்ட இந்தியாவை உருவாக்க உழைத்து வருவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News November 6, 2025

பெண்களுக்கு ₹1,200 தரும் அரசு திட்டம்!

image

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய உதவித்தொகை திட்டம் மூலம் கணவனை இழந்து வாடும் பெண்களுக்கு மாதந்தோறும் ₹1,200 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்களின் வயது 60-க்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ₹1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது. கிராம பஞ்சாயத்து (அ) மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பியுங்கள். பல பெண்களுக்கு பயனுள்ள இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 6, 2025

நான் ஆட்சிக்கு வந்தால் இதற்கெல்லாம் தடை: சீமான்

image

தான் ஆட்சிக்கு வந்தால் தண்ணீரை காசுக்கு விற்பதற்கும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கும் தடை விதிப்பேன் என சீமான் கூறியுள்ளார். உணவு, காற்று, நீர் என அனைத்திலும் விஷம் கலந்திருப்பதாக கூறிய அவர், சுற்றுச்சூழலை காப்பதை விட்டுவிட்டு மரங்கள் மாநாட்டை நடத்தியதற்காக தன்னை கலாய்க்கின்றனர் என பேசியுள்ளார். மேலும், பிறந்த குழந்தைகளுக்கும் புற்றுநோய் வருவதாக கூறி வருத்தம் தெரிவித்தார்.

News November 6, 2025

BREAKING: அரசியல் கட்சிகளுக்கு புதிய நெறிமுறை

image

கரூர் துயரத்தை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பேரணிகளுக்கு அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. கட்சி கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 நாளுக்கு முன் அனுமதி வழங்கப்படும்; அரசியல் கூட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகளிடம் ₹1-₹20 லட்சம் வரை வைப்பு தொகை வசூலிக்கப்படும். ரோடு ஷோ நடத்த உள்ள வழித்தடம், உரை நிகழ்த்த உள்ள இடம் குறிப்பிட பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!