News June 20, 2024

இந்திய மருந்துக்கு தடை விதித்த நேபாள்

image

மிக மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ஸைடஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பயோடக்ஸ் மருந்துக்கு நேபாள் மருந்து கட்டுப்பாட்டுத் துறை தடைவிதித்துள்ளது. நேபாள் ஆய்வுக் கூடத்தில் பயோடக்ஸ் 1ஜிஎம் மருந்து பரிசோதிக்கப்பட்டது. அதில், குறிப்பிட்ட தயாரிப்பு முறைகளை அந்நிறுவனம் பின்பற்றவில்லை என்றும் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டால் அவர்களது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்றும் தெரியவந்துள்ளது.

Similar News

News November 15, 2025

தமிழில் ரீமேக் செய்து சிதைத்து விட்டோம்: ராணா

image

‘பெங்களூர் டேஸ்’ மலையாள படத்தை தமிழில் ரீமேக் செய்து சிதைத்துவிட்டதாக ராணா டகுபதி தெரிவித்துள்ளார். மச்சான் அந்த படத்தில் நிவின் பாலி, பஹத் ஃபாசில், துல்கர் சல்மான் என எல்லோரும் இளமையாக இருக்கிறார்கள், இங்கே நாம் மிடில் ஏஜில் ரிட்டயர்ட் ஆனவர்கள் போல் இருக்கிறோம் என ஆர்யா ஷூட்டிங் போதே சொன்னதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். கடைசியில் ஆர்யா கூறியதுதான் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

தமிழகத்திற்கு நெருக்கமான யூடியூபர் தோல்வி

image

யூடியூபில் 96 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட பிஹார் யூடியூபர் மனிஷ் காஷ்யப், 50,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஜன்சுராஜ் கட்சி சார்பில் சான்பாடியா தொகுதியில் போட்டியிட்ட அவர், 37,000 வாக்குகளை பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளார். இவர், தமிழ்நாட்டில் பிஹாரிகள் அடித்து கொல்லப்படுவதாக வீடியோ வெளியிட்டு, பின்னர் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 15, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 520 ▶குறள்: நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. ▶பொருள்: மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

error: Content is protected !!