News October 18, 2025
நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

*என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். *ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும். *இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. *மன்னிப்பு இல்லாமல் இங்கே எதிர்காலம் இல்லை.
Similar News
News October 18, 2025
Business Roundup: 3-வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்

*லாக்கர் வாடகை கட்டணத்தை பஞ்சாப் தேசிய வங்கி குறைத்துள்ளது. *இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகின. *அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ₹88.03-ஆக உள்ளன. *சர்வதேச ரயில் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம். *அரிய வகை கனிமங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய கூடுதல் முக்கியத்துவம்.
News October 18, 2025
9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 23-ம் தேதி மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
News October 18, 2025
மீனவர்கள் கைது: இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம்

தமிழகம், புதுவை மீனவர்கள் கைதை கண்டித்து, வரும் 27-ம் தேதி சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர், இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த ஆண்டு மட்டுமே 180 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 30 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.