News April 14, 2024

முடி உதிர்வை தடுக்கும் நெல்லி தேநீர்

image

மலக்குடலில் தேங்கி நிற்கும் நச்சு கழிவுகளை நீக்கி, முடி உதிர்வை தடுக்க நெல்லி தேநீரை பருகலாம் என சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். பாத்திரத்தில் நெல்லிச் சாறை ஊற்றி கொதிக்க விடவும். அது நன்றாக கொதித்தவுடன் அதில் இஞ்சி, மிளகு தூள் சேர்த்து இறக்கி விடவும். குடிக்கும் சூட்டில் அதனை வடிகட்டி தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து 45 நாள்கள் பருகி வந்தால் முடி உதிர்வு நிற்குமாம்.

Similar News

News November 28, 2025

தி.மலை: தீபத்துக்கு போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தி.மலை கார்த்திகை மகா தீபம் டிச.3ல் நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்நிலையில், அரசு பிரத்யேக மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், தற்காலிக பேருந்து நிறுத்தம், கார் பார்க்கிங், குடிநீர் வசதி, மருத்துவ முகாம், கழிவறைகள், ஆம்புலன்ஸ் வசதி எங்குள்ளது என தெரிந்துகொள்ளலாம். இந்த <>லிங்க் <<>>மூலம் டவுன்லோடு செய்து, தீபத்தன்று கிரிவலம் செல்ல நினைப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 28, 2025

செங்கோட்டையன் சென்ற விமானத்தில் கோளாறு.. பதற்றம்

image

சென்னையில் இருந்து செங்கோட்டையன் சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. கோவைக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீரென சிக்னல் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர், விமானம் மீண்டும் கோவைக்கு புறப்பட உள்ளது.

News November 28, 2025

வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. ஸ்டாலின் அறிவிப்பு

image

டிட்வா புயலையொட்டி, முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்பட மாவட்ட கலெக்டர்களுக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்திய அவர், பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு 16 SDRF மற்றும் 12 NDRF படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!