News March 18, 2024

நெல்லை: அரசியல் கட்சிகளே உஷார்

image

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் ஊடகங்களில் வரும் செய்திகள் கண்காணிக்கப்படுகிறது. இந்த செய்திகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் மீது புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

Similar News

News January 19, 2026

நெல்லை: Spam Calls-க்கு இனி ‘END கார்டு’!

image

நெல்லை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 19, 2026

நெல்லை: ஆசையை தூண்டி ரூ.30 லட்சம் மோசடி செய்த பெண்

image

நெல்லையைச் சேர்ந்த 37 வயதான இளைஞரிடம் தர்ஷினி என்ற பெண் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு ஷேர் மார்க்கெட்டிங் முதலீடு செய்ய ஆசையை தூண்டினார். முதலில் ரூ.6000 முதலீடு செய்து, அந்த பணத்தை எடுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் படி மேலும் மேலும் வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.30 லட்சம் செலுத்தி மீட்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் படி சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 19, 2026

நெல்லை: நாய் குறுக்கே பாய்ந்ததால் ஒருவர் பலி!

image

கீழகோவிலான்புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (45). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவலைக்காரன் குளம் அருகே பைக்கில் சென்றபோது நாய் குறுக்கே பாய்ந்தது. இதனால் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பலன் இன்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். விபத்து குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!