News August 13, 2024

நெல்லை: சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் அரசு சார்பில் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி காலை சரியாக 9.05 மணிக்கு தேசியக் கொடியை ஆட்சியர் ஏற்றி வைக்கிறார். பின்னர் காவல்துறையினர் அணிவகுப்பை பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதைத்தொடர்ந்து அரசு அலுவலர்களுக்கு நற்சான்று வழங்குகிறார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Similar News

News November 14, 2025

நெல்லை: ரூ.88,635 ஊதியத்தில் வேலை

image

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> [CLICK HERE]<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 14, 2025

நெல்லை: தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலி

image

தேவர்குளத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நேற்று தேவர் குளத்தில் இருந்து ராமையன்பட்டிக்கு பைக்கில் மானூர் அருகே அழகிய பாண்டியபுரம் சென்றார். அப்போது நெல்லையில் இருந்து ஸ்ரீவல்லிபுத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து பைக் மீது மோதியது. இதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மானூர் போலீசார் அவரது உடலை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 14, 2025

நெல்லை: பெண்ணிடம் கத்தியை காட்டி செயின் பறிப்பு

image

மானூர் கீழபிள்ளையார் குளத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் கடந்த 8-ம் தேதி தாமிரபரணி ஆற்றில் வைத்து கத்தியை காட்டி மிரட்டி 4 பவுன் செயினை பறித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து முத்துலட்சுமி ஜங்ஷன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்து நெல்லை சந்திப்பு பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து மற்றும் ஹரி கிருஷ்ணா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!