News March 23, 2024
நெல்லை அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி

நெல்லை தொகுதியில் சிம்லா முத்துசோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏப்.19இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 32 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், 2016 சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு சீட் வழங்குவதா என அதிமுகவில் எதிர்ப்பு எழுந்ததால் அவர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 28, 2025
3 குழந்தைகளுக்கு தாயான ஸ்ரீலீலா…. குவியும் பாராட்டு

தெலுங்கில் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இவர் 2022-ல் 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், 3-வதாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளதாக ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார். அக்குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவரின் தாய் உள்ளத்துக்கு பாராட்டுகள் குவிகின்றன.
News April 28, 2025
இபிஎஸ்-க்கு அரசியல் வீழ்ச்சி கவுண்ட்டவுன் ஸ்டார்ட்

அமைச்சரவை மாற்றம் குறித்து விமர்சித்த இபிஎஸ்-க்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். குடும்பத்திற்காக கூட்டணி வைத்த இபிஎஸ்ஸின் அரசியல் வீழ்ச்சியின் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது எனக் கூறிய அவர், இபிஎஸ் ஆட்சியில் அமைச்சரவை மாற்றமே நடக்கவில்லையா? என கேள்வி எழுப்பினார். மேலும், தோல்வியில் சாதனை படைக்கும் ‘தோல்விசாமி’, அதிமுகவை பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு செல்வதாகவும் விமர்சித்துள்ளார்.
News April 28, 2025
மூன்று நாள்கள் போர் நிறுத்தம்

உக்ரைன் மீதான போர் 3 நாள்கள் நிறுத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். மே 8 முதல் மே 10 வரை போர்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. மே 9-ம் தேதி இரண்டாம் உலகப்போரின் வெற்றி தின கொண்டாட்டம் நடைபெறவிருப்பதால், புடின் இந்த முடிவை எடுத்திருக்கிறார். மேலும், இந்த போர்நிறுத்தம் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.