News April 6, 2024
2 மூலவர்களை கொண்ட நெல்லையப்பர் கோயில்

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில் 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில். மிகப்பெரிய கோபுரம், சன்னிதி, தெப்பக்குளம் என பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. பொதுவாக கோயிலில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இக்கோயிலில் 2 மூலவர்கள் உள்ளனர். அதில் லிங்க வடிவில் இருப்பவர் நெல்லையப்பர் எனவும், சயன கோலத்தில் இருப்பவர் கோவிந்தராஜர் எனவும் வணங்கப்படுகிறார்.
Similar News
News November 11, 2025
Tandoori சிக்கன் சாப்பிட்டால் கேன்சர் வருமா?

பொதுவாக சிக்கனில் அதிக புரதம் இருப்பதால் அது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதனை Tandoori-யாகவோ, Grill-ஆகவோ சாப்பிட வேண்டாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனை நெருப்பில் சுட்டு எடுக்கும்போது இதன் மேல் உருவாகும் கருப்பு லேயரில் Nitrosamine என்ற கெமிக்கல் இருக்கிறதாம். இது கேன்சரை உண்டு பண்ணலாம். எனவே இதனை தவிர்த்துவிட்டு சாப்பிடுவதும் நல்லது என்கின்றனர். பலரது உயிரை காக்கும், SHARE THIS.
News November 11, 2025
நாட்டை அதிர வைத்த டாப் 7 குண்டுவெடிப்பு சம்பவங்கள்!

அமைதி பூங்காவான இந்தியாவிலும் அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. தலைநகரை டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 10 அப்பாவி மக்கள் இன்னுயிரை இழந்து விட்டனர். இது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், நாட்டை உலுக்கிய டாப் 7 வெடிகுண்டு சம்பவங்களை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து நம் நாட்டின் அழியாத வடுக்களை பார்க்கவும்.
News November 11, 2025
50 தொகுதிகளை கேட்டு அழுத்தம் கொடுக்கும் பாஜகவா?

2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் மக்களவை தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 3 மடங்கு அதிகரித்தது. இதனால், அதிமுகவிடம் 50 தொகுதிகளை கேட்டு பாஜக அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுக சில டேட்டாக்களை கொடுத்து, அதிகபட்சமாக 25 தொகுதிகள் கொடுக்கலாம் எனவும் சொல்லியுள்ளதாம். ஆனால், அதிமுக என்னதான் சொன்னாலும் 50 தொகுதிகள் லட்சியம்.. 40 தொகுதிகள் நிச்சயம் என பாஜக விடப்பிடியாக இருக்கிறதாம்.


