News July 23, 2024

நெல்லை மாவட்ட அணை நிலவரம்

image

அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 117.50 அடி உள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் 70.60 அடியாக மட்டுமே இருந்தது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. கடந்த ஆண்டு 80.87 அடியாக இருந்தது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 72.10 அடியாக உள்ளது. கடந்த ஆண்டு 44.5 அடியாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 13, 2025

நெல்லை பஸ் நிலைய கடைகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை

image

புது பஸ் நிலைய கடையில் இன்று தீ பிடித்ததை அடுத்து மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா உத்தரவு படி புது பஸ் நிலையத்தில் அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கடை நடத்தும் உரிமையாளர்களின் கடை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படுவதுடன் உரிய உள்ளாட்சி அமைப்புகளின் சட்ட விதிப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர்.

News September 13, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்டம்பர் 12) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News September 13, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.12] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அசோக் குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!