News August 11, 2024
நெல்லை-செங்கல்பட்டு சிறப்பு ரயில்

சுதந்திர தின விழாவையொட்டி தொடர் விடுமுறையால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நெல்லையிலிருந்து செங்கல்பட்டிற்கு ஆக. 13, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டிலிருந்து ஆக.14,19 ஆகிய தேதிகளில் மாலை 05.55 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று(ஆக.,11) காலை 8 மணிக்கு தொடங்கியது.
Similar News
News January 10, 2026
நெல்லை: 6 வயது சிறுவனுக்கு முதியவர் பாலியல் தொல்லை

அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவனிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு, பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த, 65 வயது முதியவர் நமச்சிவாயம் என்பவர் கைதாகினர். அவருக்கு நேற்று (ஜன.9) போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அரசு சார்பாக ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்திரவிட்டார்.
News January 10, 2026
நெல்லை: 6 வயது சிறுவனுக்கு முதியவர் பாலியல் தொல்லை

அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவனிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு, பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த, 65 வயது முதியவர் நமச்சிவாயம் என்பவர் கைதாகினர். அவருக்கு நேற்று (ஜன.9) போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அரசு சார்பாக ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்திரவிட்டார்.
News January 10, 2026
நெல்லை: வாலிபர் உயிரை பறித்த பாதாம் ஜூஸ்

நெல்லை, பாலபாக்கிய நகரை சேர்ந்தவர் கேசவ ராஜா(32). இவர் கார் கம்பெனியில் பணி செய்து வருகிறார். இவர் நேற்று தனது வீட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த பாதாம் (கீர்) ஜூஸை எடுத்து குடித்தார். இதனால் அவருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நல குறைவு ஏற்பட்டது. பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். கேசவ ராஜா இறந்தது குறித்து நெல்லை போலீசார் விசாரிக்கின்றனர்.


