News May 27, 2024
பதிப்புரிமைத் தொகையில் வாழ்ந்த நேரு

ஆனந்தபவன் அரண்மனையில் இளவரசனாக பிறந்து, நாட்டின் அரசனாக வாழ்ந்து, துறவியாக இறந்தவர் நேரு. சுதந்திரப் போராட்டத்தில் இணைந்த பின், சாகும்வரை தான் எழுதிய புத்தகங்களின் பதிப்புரிமைத் தொகையை மட்டுமே தனது ஒரே வருமானமாக அவர் கொண்டிருந்தார். கோர்டு – சூட்டு, சொகுசு மாளிகை, தனி விமானப் பயணம் போன்ற உல்லாச வாழ்வை ஒதுக்கி, நாட்டை முன்னேற்ற உழைத்த நவீன இந்தியாவின் சிற்பி நேருவின் நினைவு தினம் இன்று!
Similar News
News March 8, 2026
7 நாட்களில் நாடு திரும்பிய 52,000 இந்தியர்கள்

இஸ்ரேல் – ஈரான் போரை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளின் வான்வெளி போக்குவரத்து ஓரளவு திறக்கப்பட்டதன் மூலம் விமான நிறுவனங்கள் வணிக விமானங்களை இயக்குகின்றன என்றும், மார்ச் 1 முதல் 7-ம் தேதி வரை வளைகுடா நாடுகளில் இருந்து 52,000 பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
News March 8, 2026
டி20 WC பைனலில் முதல்முறையாக இந்தியர்கள்!

தற்போதைய இந்திய அணியில் உள்ள 6 வீரர்கள் முதல் முறையாக டி20 WC பைனலில் விளையாட இருக்கிறார்கள். அதன்படி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா. ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாட உள்ளனர். ODI WC, சாம்பியன்ஸ் டிராபி பைனலில் வருண் சக்கரவர்த்தி, இஷான் கிஷன் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பங்கேற்ற போது டி20 பைனலில் முதல்முறையாக பங்கேற்கின்றனர்.
News March 8, 2026
இந்திரா காந்தி பொன்மொழிகள்!

*எதிர் கேள்வி கேட்பதே மனித முன்னேற்றத்திற்கான அடிப்படை. *துணிச்சலின் நல்லொழுக்கம், மன்னிப்பு. *ஒருவர் பேசுவதை முழுதாக கேட்டுவிட்டு பின்னர் கேள்வி கேட்க பழகிக் கொள்ளுங்கள். *தம் உரிமைகளை கோருபவர்கள் என்றும், தம் கடைமைகளை மறக்கக்கூடாது. *விருப்பம் இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.


