News May 27, 2024

பதிப்புரிமைத் தொகையில் வாழ்ந்த நேரு

image

ஆனந்தபவன் அரண்மனையில் இளவரசனாக பிறந்து, நாட்டின் அரசனாக வாழ்ந்து, துறவியாக இறந்தவர் நேரு. சுதந்திரப் போராட்டத்தில் இணைந்த பின், சாகும்வரை தான் எழுதிய புத்தகங்களின் பதிப்புரிமைத் தொகையை மட்டுமே தனது ஒரே வருமானமாக அவர் கொண்டிருந்தார். கோர்டு – சூட்டு, சொகுசு மாளிகை, தனி விமானப் பயணம் போன்ற உல்லாச வாழ்வை ஒதுக்கி, நாட்டை முன்னேற்ற உழைத்த நவீன இந்தியாவின் சிற்பி நேருவின் நினைவு தினம் இன்று!

Similar News

News September 17, 2025

இன்று காலை 8 மணிக்கு ரெடியா இருங்க!

image

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோர், இன்று காலை 8 மணிக்கு தயாராக இருக்க வேண்டும். ஏனெனில், தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் இருந்து மதுரை, செங்கோட்டை, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி பகுதிகளுக்கு வரும் அக்., 29 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

News September 17, 2025

தன்மானம் பேசிவிட்டு டெல்லி ஏன் செல்ல வேண்டும்? TTV

image

தன்மானம் தான் EPS-க்கு முக்கியம் என்றால், டெல்லி செல்ல வேண்டிய அவசியம் என்ன என TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவால் EPS-ன் ஆட்சி காப்பாற்றப்படவில்லை எனவும், கூவத்தூரில் அதிமுக MLA-க்கள் வாக்களித்ததால் தான் அவர் CM ஆனார் என்றும் TTV விமர்சித்துள்ளார். மேலும், தன்னை CM வேட்பாளர் என்றால் யாரும் ஓட்டு போடமாட்டார்கள் என்று கூவத்தூரில் கூறியவர்தான் EPS என்றும் சாடியுள்ளார்.

News September 17, 2025

அழகில் மயக்கும் அனீத் படா

image

‘சையாரா’ என்ற பாலிவுட் காதல் திரைப்படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. உணர்ச்சி மிக்க காதல் கதை கொண்ட ‘சையாரா’ கிளர்ச்சியூட்டும் இசையையும் கொண்டுள்ளது. இந்த படத்தின் மூலம் நடிகை அனீத் படாவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. அனீத் படாவின் அழகிய போட்டோஸ் மேலே இணைக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க. உங்களுக்கு அனீத் படாவை ஏற்கெனவே தெரியுமா? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!