News May 25, 2024
போக்குவரத்து, காவல்துறை பிரச்சினையில் பேச்சுவார்த்தை

தூத்துக்குடி அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் ஆறுமுகப்பாண்டி பயணச்சீட்டு எடுக்க முடியாது என வாக்குவாதம் செய்ததால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. வாரண்ட் இருந்தால்தான் டிக்கெட் இல்லை என போக்குவரத்து துறை கூறிய நிலையில், அரசுப் பேருந்துகளை நிறுத்தி போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இந்தப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது குறித்து, 2 துறைகளின் செயலர்களும் சந்தித்து பேசினர்.
Similar News
News March 14, 2026
இஸ்ரேல் – ஈரான் போரில் இதுவரை 2,000 பேர் பலி!

கடந்த 2 வாரங்களாக ஈரான், லெபனான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் 2,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மறுபுறம், இப்போரில் உயிரிழந்த US வீரர்களின் எண்ணிக்கை 13-ஐ எட்டியுள்ளது. இதில் லெபனான் மீதான தாக்குதலில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 773 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News March 14, 2026
எரிபொருள் விலை எதிரொலி.. விமான டிக்கெட் விலை உயர்வு!

எண்ணெய் விலை உயர்வு காரணமாக, விமான நிறுவனங்கள் டிக்கெட்டுகளுக்கு கூடுதல் எரிபொருள் கட்டணத்தை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன. ஏற்கனவே AirIndia கூடுதல் கட்டணம் வசூலித்து வரும் நிலையில், Indigo-வும் கட்டணத்தை அதிகரித்துள்ளது. நாளை முதல், சேவைகளைப் பொறுத்து கூடுதலாக ₹425-₹2,300 வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மறுபுறம், spicejet, Akasa air நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வாய்ப்புள்ளது.
News March 14, 2026
லெனின் பொன்மொழிகள்

▶பிழைகள் மற்றும் தோல்விகள் இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை. ▶நம்பிக்கை நல்லதுதான். ஆனால் கட்டுப்பாடு சிறந்தது. ▶நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே; நீ விரும்புவதை உலகம் எதிர்த்தாலும் செய்து முடி. ▶தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும். ▶பெண்ணுரிமை இல்லாத நாடு, காற்றில்லாத வீடு.


