News April 25, 2024
அலட்சியம் காட்டும் தனியார் பள்ளிகள்

இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். எனினும், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. மறுபுறம், சில தனியார் பள்ளிகள் ஆர்டிஇ குறித்த சந்தேகங்களுக்கு முறையாக பதில் அளிப்பதில்லை என பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது. இதனால், 2022 – 23 கல்வியாண்டில் 95,946 ஆக இருந்த ஆர்டிஇ மாணவர்கள் சேர்க்கை, கடந்த ஆண்டு 70,553 ஆக குறைந்துள்ளது.
Similar News
News January 6, 2026
தூத்துக்குடிக்கு இலவச புகார் எண் அறிவிப்பு

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பல்வேறு நேரங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறும் சூழல் ஏற்படுகிறது. இதனை உடனே சீர் செய்ய தூத்துக்குடி மாநகராட்சி இலவச தொலைபேசி எண்ணை (18002030401) அறிவித்துள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் மற்ற பல்வேறு அடிப்படை புகாரினையும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க.
News January 6, 2026
விஜய்யின் கடைசி சம்பளம் இவ்வளவா..!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘ஜனநாயகன்’ ஜன.9-ல் ரிலீஸாகிறது. இப்படத்திற்காக விஜய் ₹220 கோடி சம்பளம் பெற்றதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலில் களம் காணும் விஜய்யின் கடைசி படம் இதுவென்பதால், சினிமாவில் அவர் பெறும் கடைசி சம்பளம் இதுவாகும். H.வினோத் -₹25 கோடி, அனிருத் -₹13 கோடி, பாபி தியோல் & பூஜா ஹெக்டே ஆகியோருக்கு தலா ₹3 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
News January 6, 2026
தீபத்தூண் வழக்கு: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை <<18776534>>இரு நீதிபதிகள் அமர்வு<<>> உறுதி செய்துள்ளது. அத்துடன் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இதோ ◆தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் தான் தீபத்தூண் உள்ளது ◆மாவட்ட கலெக்டரின் மேற்பார்வையில் கோயில் நிர்வாகத்தினர் தீபம் ஏற்ற வேண்டும் ◆மலை மீது தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்க கூடாது ◆தர்காவிற்கு இடையூறு இல்லாமல் தூணை இடம் மாற்றலாம்.


