News November 24, 2024
இந்திய அணியில் புறக்கணிப்பு, ஆனால் IPLஇல் அதிர்ஷ்டம்

உள்நாட்டு போட்டிகளில் விளையாடவில்லை எனக் கூறி, இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் இசான் கிஷண், ஷ்ரேயஸ் ஐயர். இதனால் நீண்ட நாள்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் ஏலத்தில் ஷ்ரேயஸ் ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார். அதேபோல், இசான் கிஷண் சன்ரைசர்ஸ் அணியால் ரூ.11.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
Similar News
News November 20, 2025
U-19 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு

அடுத்த ஆண்டு ஜிம்பாப்வே, நமிபியாவில் நடக்கவுள்ள U-19 ஆடவர் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஜன.15-ம் தேதி தொடங்குகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. புள்ளிகள் அடிப்படையில் சூப்பர் 6 சுற்றுக்கு அணிகள் தகுதிபெறும்.
News November 20, 2025
INDIA கூட்டணி முடிவுக்கு வருகிறதா?

பிஹார் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக காங்கிரஸ் தலைமை சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி வாய்ப்புள்ள மாநிலங்களில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாகவும், இதர மாநிலங்களில் தேவைக்கு ஏற்ப தொகுதி பங்கீட்டை உறுதி செய்து, கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் INDIA கூட்டணி முடிவுக்கு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News November 20, 2025
ரிஷப் பண்ட் கேப்டன்.. சுப்மன் கில் OUT?

கழுத்து வலி காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேட்டிங் ஆர்டர் பொறுத்தவரை சுப்மன் கில்லுக்கு பதிலாக சாய் சுதர்ஷன் விளையாடவுள்ளார். 2-வது டெஸ்ட் வரும் 22-ம் தேதி கவுஹாத்தியில் நடைபெறுகிறது.


