News April 19, 2025

நீட் மரணம்: மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுக அஞ்சலி

image

நீட் தேர்வு ரத்து என்ற திமுகவின் பொய் வாக்குறுதியால் உயிரிழந்த 22 மாணவர்களுக்கு, இன்று அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மாலை 6 மணிக்கு அதிமுக மாணவர் அணியினர் அஞ்சலி செலுத்த உள்ளனர். பொய் வாக்குறுதி அளித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வாக்குகளைப் பெற்று திமுக வெற்றி பெற்றதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

Similar News

News November 9, 2025

தொடரும் கொடூரம்: 4 வயது சிறுமிக்கு வன்கொடுமை

image

மே.வங்கத்தில் கடந்த சில மாதங்களாக தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், கொல்கத்தா ஹூக்லி நகரின் தாரகேஷ்வர் ரயில் நிலையத்தில், பாட்டியுடன் தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை மர்ம நபர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமி மீட்கப்பட்ட நிலையில், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

News November 9, 2025

7 நாள்களுக்கு 7 மூலிகை சாறுகள்!

image

இன்றைய சூழலில் அடிக்கடி உடலில் ஏதாவது ஒரு நோய் வந்து கொண்டே இருக்கிறது. நமது சுற்றுப்புறத்தில் கிடைக்கும் எளிய மூலிகைகள் பல, உடலை வலுப்படுத்தவும், நோய்களை குறைக்கவும் உதவுகின்றன. ஆனால் அதை மருந்தாக சாப்பிடுவது பலருக்கும் சிரமமாக உள்ளது. ஜூஸ் ஆக குடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றனர். அப்படி, வாரம் முழுவதும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் 7 மூலிகை சாறுகள் பற்றி அறிய மேலே SWIPE பண்ணுங்க.

News November 9, 2025

BREAKING: அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது

image

தங்கள் கட்சி வளர்ந்துள்ளதால், எந்த கூட்டணிக்கு சென்றாலும் 5 சீட்டுக்கு குறையாமல் கேட்போம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி புதிய குண்டை வீசியுள்ளார். மேலும், கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக, தேமுதிக போலவே தற்போது புரட்சி பாரதமும் விலகியிருந்து கூட்டணி கதவைத் திறந்து வைத்துள்ளது.

error: Content is protected !!