News April 19, 2025
நீட் மரணம்: மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுக அஞ்சலி

நீட் தேர்வு ரத்து என்ற திமுகவின் பொய் வாக்குறுதியால் உயிரிழந்த 22 மாணவர்களுக்கு, இன்று அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மாலை 6 மணிக்கு அதிமுக மாணவர் அணியினர் அஞ்சலி செலுத்த உள்ளனர். பொய் வாக்குறுதி அளித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வாக்குகளைப் பெற்று திமுக வெற்றி பெற்றதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
Similar News
News November 19, 2025
சென்னையில் பெண் மருத்துவர் தற்கொலை… போலீஸ் அதிரடி

சென்னை முகப்பேரில் பெண் மருத்துவர் ஹாருள் சமீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் அசாருதீன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஹாருள் சமீராவை வரதட்சணை கேட்டு அசாருதீன் துன்புறுத்தியது, ஆர்.டி.ஓ விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த அசாருதீனை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
News November 19, 2025
TN-ல் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி: ஆதவ் அர்ஜுனா

<<18327587>>ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி<<>> கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜுனா, TN-ல் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக சாடியுள்ளார்.
எங்கும் சுதந்திரமாக சென்று வர முடியாத அளவிற்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேறுவதாக அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தனி பாதுகாப்பு திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.
News November 19, 2025
பிஹார் முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு

பிஹாரின் அடுத்த CM ஆக மீண்டும் நிதிஷ்குமாரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். NDA கூட்டணி கட்சி MLA-க்களின் கூட்டத்தில் ஒருமனதாக அவர் தேர்வான நிலையில், நாளை காலை 11:30 மணிக்கு நடைபெறும் விழாவில் CM ஆக பதவியேற்கிறார். இந்நிகழ்வில் PM மோடி, பாஜக முதல்வர்கள், MP-க்கள், MLA-க்கள் பங்கேற்கவுள்ளனர்.


