News June 23, 2024
நீட் முறைகேடு: CBI விசாரணைக்கு ஒப்புதல்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத்குமார் சிங் இன்று பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
Similar News
News November 16, 2025
இனி பேங்க் வெப்சைட் இப்படித்தான் இருக்கும்!

பாதுகாப்பான பணப் பரிமாற்றத்திற்கும், நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கிலும் வங்கிகள் தங்களது டொமைன்களை ‘.bank.in’ என மாற்றியுள்ளன. இதன்படி, https://sbi.bank.in, https://www.hdfc.bank.in/ என்பது போல் டொமைன்கள் இருக்கும். இதனால் சைபர் மோசடிகள் தடுக்கப்படும் என RBI நம்புகிறது. இந்த டொமைன், RBI-ஆல் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதால் நம்பகத்தன்மையாக இருக்கும். ஷேர் பண்ணுங்க.
News November 16, 2025
சுந்தர் சி விலகியதற்கு ஹிப் ஹாப் ஆதி காரணமா?

ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகியது ஏன் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்துவருகிறது. இந்நிலையில், இதற்கு ஹிப் ஹாப் ஆதி காரணமாக இருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது, இப்படத்துக்கு அனிருத்துக்கு பதிலாக ஆதி இசையமைக்கட்டும் என சுந்தர் சி கேட்டதற்கு தயாரிப்பு தரப்பு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுந்தர் சி விலகினார் என்கின்றனர்.
News November 16, 2025
நாளை 7 மாவட்டங்களில் விடுமுறையா? வந்தது Alert

அடுத்த 5 நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அலர்ட் விடுத்துள்ளது. குறிப்பாக, நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இன்று இரவு அல்லது நாளை காலை அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


