News June 19, 2024
நீட் வினாத்தாள் கசிவு: கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

நீட் தேர்வில் மிகச்சிறிய தவறு நடந்திருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு குறித்த மனுவை விடுமுறை காலச் சிறப்பு அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தேர்வு முகமையும் மத்திய அரசும் உரிய நேரத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியதோடு, தங்கள் பதில்களை புதிதாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
Similar News
News November 14, 2025
BREAKING: திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளுக்கும்…

அரசு பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை DCM உதயநிதி தொடங்கி வைத்துள்ளார். காரைக்குடியில் முதல்கட்டமாக 1,448 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை அவர் வழங்கினார். அனைத்து பள்ளிகளிலும் ₹248 கோடி மதிப்பில் 5,34,017 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. தற்போது, வார விடுமுறை என்பதால் வரும் திங்கள்கிழமை முதல் சைக்கிள் விநியோகம் செய்யும் பணி தொடங்கும்.
News November 14, 2025
நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: PM மோடி

பிஹார் தேர்தல் வெற்றி நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கு கிடைத்தது என PM மோடி தெரிவித்துள்ளார். பிஹார் மக்களுக்கு தனது மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மக்களின் தீர்ப்பு மேலும் உறுதியாக சேவையாற்ற உந்துதல் தரும் எனவும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பிஹாரில் 200 தொகுதிகளுக்கு மேல் NDA கூட்டணி முன்னிலை உள்ளது.
News November 14, 2025
பிஹார் வெற்றி தமிழகத்திலும் தொடரும்: நயினார்

பிஹார் தேர்தல் வெற்றி தமிழகத்திலும் தொடரும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக வெற்றிக்கு ECI உதவியதாக காங்கிரஸ் வைக்கும் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்றால் அமைதியாக இருக்கும் காங்., தோல்வியடைந்தால் மட்டும் ECI-யை குற்றம்சாட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.


