News March 29, 2025

நீட் தேர்வு மாணவர் கொல்லி: அன்புமணி

image

நீட் அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட 2வது மாணவி தர்ஷினி என x தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்க நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News January 16, 2026

உழவுத் தோழர்களுக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்

image

உழவுத் தோழர்களுக்கு பகிர வேண்டிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள் இதோ *உழவனின் தொண்டனாய், வீரத்தின் அடையாளமாய் விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்துவோம்.. *உழவுக்கு உறுதுணை புரியும் மாடுகளுக்கும், இயற்கைக்கும் நன்றி உரைத்துப் பொங்கலிடும் நாள், மாட்டுப் பொங்கல் திருநாள்! *இது உழவர்களின் தோழனை கொண்டாடும் திருநாள், அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

News January 16, 2026

சமூக சேவைக்கு ₹81,324 கோடி கொடுத்த பில் கேட்ஸ்

image

உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனமான Bill & Melinda Gates Foundation-ஐ மூடும் பணிகளை பில்கேட்ஸ் தொடங்கியுள்ளார். அதன்படி நடப்பாண்டில் $9 பில்லியன் (₹81,324 கோடி) தொண்டு பணிகளுக்கு செலவிடும் அதேவேளையில், தனது அறக்கட்டளையில் வேலை செய்யும் 500 பேரை வேலை நீக்கம் செய்ய உள்ளார். 2045-க்குள் தனது சொத்தின் பெரும்பகுதியை ($200 பில்லியனை தாண்டும்) நன்கொடையாக வழங்கி அறக்கட்டளையை மூட உள்ளார்.

News January 16, 2026

வேலை கேட்டு அலையமாட்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான்

image

கடந்த 8 ஆண்டுகளில் படைப்பாற்றல் இல்லாதவர்களின் கைகளுக்கு (கார்ப்பரேட் நிறுவனங்கள்) இசைத்துறை சென்றுவிட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதனால் வேலையை கேட்டு எங்கும் அலையமாட்டேன் எனவும், தகுதி மற்றும் திறமையை கொண்டு தனக்கான வேலையை சம்பாதிப்பது தான் எனது நேர்மை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அதுவரை எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!