News April 19, 2025
நீட் தேர்வு பலி: TN முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் முன்பு அதிமுக மாணவர் அணி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் பொய் சொல்லி திமுக ஆட்சிக்கு வந்ததாகவும் கண்டன முழக்கம் எழுப்பினர். இதேபோல் TN முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Similar News
News December 31, 2025
தமிழகத்தை உ.பி.,யுடன் ஒப்பிடுவது தவறு: காங்., MP

UP-ஐ விட அதிக கடனில் தமிழகம் உள்ளதாக காங்., நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கூறியது, அவருடைய தனிப்பட்ட கருத்து என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். UP-ஐ தமிழகத்துடன் ஒப்பிடுவது தவறு எனக் குறிப்பிட்ட அவர், இங்குள்ள சுகாதார, சமூக, கல்வி, பொருளாதார, முதலீடு குறியீடுகளை உபி.,யுடன் ஒப்பிடவே முடியாது எனவும் அவர் கூறினார். தமிழகம் போட்டி போட வேண்டியது மகாராஷ்டிராவுடன் மட்டுமே என்றும் அவர் பேசியுள்ளார்.
News December 31, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 31, மார்கழி 16 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 2:00 AM – 3:00 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 PM – 12:00 PM ▶திதி: துவாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News December 31, 2025
கூச்சமின்றி பொய் பேசுகிறார் அமைச்சர்: அண்ணாமலை

கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டதாக அண்ணாமலை சாடியுள்ளார். TN-ஐ போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளதாக <<18711448>>அமைச்சர் மா.சு.,<<>> கூறிய நிலையில் திருத்தணி சம்பவம், ஆவடியில் கஞ்சா பறிமுதல் உள்ளிட்ட செய்திகளை, X-ல் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கொஞ்சம் கூட கூச்சமின்றி பேசும் மா.சு., கஞ்சா விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


