News March 2, 2025
நீட் தேர்வு அச்சம்: மாணவி தற்கொலை

விழுப்புரத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனத்தை சேர்ந்த அம்மாணவி 2வது ஆண்டாக நீட் தேர்வெழுத பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். தேர்வு நெருங்கி வரும் நிலையில், அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஜனவரியில் மட்டும் ராஜஸ்தானில் நீட் தேர்வு பயத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல!
Similar News
News March 13, 2026
பெட்ரோல், டீசல்.. இரவில் புதிய அறிவிப்பு வெளியானது

பல இடங்களில் கேன்களில் பெட்ரோல் வாங்கும் நிலை அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இந்திய ஆயில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான அளவில் பெட்ரோல், டீசல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அச்சத்தில் அதிகமாக வாங்குவது, தவறான முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதை பொதுமக்கள் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News March 13, 2026
தோனி செய்வது சரியல்ல: புஜாரா

ஐபிஎல் பீவர் தொடங்கியுள்ள நிலையில் தோனி பேட்டிங் குறித்து Ex கிரிக்கெட் வீரர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார். தோனியால் ஒரு போட்டியைத் தனி ஒரு ஆளாக வென்று கொடுக்க முடியும் என்று கூறியதுடன், 8 அல்லது 9-வது வீரராக அவர் பேட்டிங் செய்வது சரியல்ல என கூறியுள்ளார். வெறும் 5, 10 பந்துகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, 25 முதல் 30 பந்துகளை எதிர்கொள்வது அணிக்கு நல்லது எனவும் அவர் பேசியுள்ளார்.
News March 13, 2026
பல வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: CM ஸ்டாலின்

OBC அல்லாத கிரீமி லேயர் நிர்ணயத்தை தெளிவுபடுத்தும் SC-ன் தீர்ப்பை தான் வரவேற்பதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். அதன்படி இனி சம்பள வருமானத்தை கிரீமி லேயருக்கான வணிகம் அல்லது சொத்து வருமானத்துடன் சமப்படுத்த முடியாது; வேலைவாய்ப்புத் துறைகளில் விரோதமான பாகுபாட்டை இத்தீர்ப்பு நிராகரிக்கிறது என கூறியுள்ளார். பல வருட போராட்டத்திற்குப் பிறகு OBC நீதிக்கு கிடைத்த தீர்க்கமான வெற்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.


