News June 13, 2024
நீட் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நடப்பாண்டில் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், வினாத்தாள் கசிவு, விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி என பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்விற்கு எதிராக 2 ஆயிரம் மாணவர்களிடம் கையெழுத்து பெற்று, அலக் பாண்டே என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Similar News
News September 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 455 ▶குறள்: மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும். ▶பொருள்: மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.
News September 11, 2025
ஆசிய கோப்பையில் இன்று Ban Vs HK

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று குரூப் B-ல் இடம்பெற்றுள்ள வங்கதேசம் – ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. ஹாங்காங் தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 94 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருந்தது. இந்த போட்டியில் தோற்றால் தொடரிலிருந்து வெளியேற நேரிடும். லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி ஹாங்காங்-ஐ விட வலுவாக காணப்படுகிறது. எனவே, இன்றைய போட்டியில் வங்கதேசம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது.
News September 11, 2025
கல்வியை பறிக்கும் உங்களுடன் ஸ்டாலின்: நயினார்

தேர்தல் ஆதாயத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தை திமுக அரசு அலட்சியப்படுத்துவதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த திருச்சியில் ஆலத்துடையான்பட்டி அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். விளம்பர நாடகங்களை அரங்கேற்ற மாணவர்களின் படிப்பை தூக்கியெறிந்து அவர்களின் வாழ்வில் விளையாடுவதா என்று நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.