News June 13, 2024
நீட் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நடப்பாண்டில் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், வினாத்தாள் கசிவு, விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி என பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்விற்கு எதிராக 2 ஆயிரம் மாணவர்களிடம் கையெழுத்து பெற்று, அலக் பாண்டே என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Similar News
News April 3, 2026
உங்க ஆபீஸில் பெஸ்ட் ஊழியராக மாற..

நிறுவனத்தின் கொள்கை, வழிகாட்டுதல்களை கரெக்ட்டா Follow பண்ணுங்க ◆சக ஊழியர்களை விட வேலையை சிறப்பாக செய்யுங்க ◆சரியான நேரத்தில வேலையை செய்து முடிப்பது அவசியமாகும் ◆தவறுகள் 2-வது முறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் ◆எப்போதும் கடின உழைப்பாளியாக இருங்க ◆ஆபீஸ் Gossip-களில் ஆர்வம் காட்ட வேண்டாம் ◆அனைவரிடமும் நல்லுறவை வளர்த்து கொள்ளுங்கள். இது போல உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸ்களை கமெண்ட் பண்ணுங்க. SHARE IT.
News April 3, 2026
திமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி.. டிடிவி தினகரன் ஷாக்

அமமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான <<19555711>>பார்த்திபன்<<>>, TTV தினகரன் மீது ஏற்பட்ட அதிருப்தியால் திமுகவில் இணைந்துள்ளார். ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிமேல் TTV தினகரன் பற்றியோ அமமுக பற்றியோ தன்னிடம் கேட்க வேண்டாம் என காட்டமாக கூறினார். தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகி கட்சியில் இருந்து விலகியது TTV தினகரன் தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளது.
News April 3, 2026
சம்பளத்துடன் கூடிய விடுமுறை: ECI உத்தரவு

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ECI உத்தரவிட்டுள்ளது. இது அரசு, பொது & தனியார் துறை என அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். ஒருவேளை விடுமுறை அளிக்கப்படாவிடில், தொழிலாளர் நலத்துறை மூலம் அந்தந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


