News October 11, 2024

தீய சக்திகளை விரட்டி அடிக்கும் வேம்பு பிரசாதம்!

image

சயனக்கோலத்தில் மிக அபூர்வமாக துர்க்கை பற்றிக்கொண்ட கோலத்தில் அருளும் தலம்தான், நெல்லை வடக்கு செழியநல்லூர் சயன வனதுர்க்கை கோயிலாகும். சிறப்பு வாய்ந்த மஹாநவமி நன்னாளில் காலையிலேயே குளித்து, விரதமிருந்து, இக்கோயிலுக்குச் சென்று துர்க்கைக்கு சிவப்புப் பட்டும் செவ்வரளிப்பூ சாற்றி, நெய் தீபமேற்றி, பொங்கலிட்டு, அங்கு தரும் வேம்பை வீட்டில் கொண்டுவந்து வைத்து வணங்கினால் தீய சக்திகள் விலகும் என்பது ஐதீகம்.

Similar News

News August 12, 2025

துருவ் விக்ரமுடன் மீண்டும் ஜோடி சேரும் அனுபமா

image

துருவ் விக்ரமின் 4-ம் படத்துக்கான பூஜை அண்மையில் நடந்துள்ளது. தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார். இதில், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், கேதிகா சர்மா ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். AR ரஹ்மான் இசையமைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருவ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதிலும் அனுபமா தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 12, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 12 – ஆடி 27 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.

News August 12, 2025

விவசாயிகளை திமுக பழிவாங்குகிறது: இபிஎஸ்

image

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குவதாக இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பேசிய அவர், பெங்களூரு சென்று மலர்களை விற்பதை தடுக்கும் வகையில் ₹20 கோடியில் சர்வதேச ஏல மையத்தை கடந்த அதிமுக ஆட்சியில் இப்பகுதியில் அமைத்தோம், ஆனால் தற்போது அது பூட்டிக்கிடப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியே இதற்கு காரணமெனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!