News September 4, 2025

NDA கூட்டணி சிதைந்து வருகிறது: எம்ஆர்கே தாக்கு

image

டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறியதை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், NDA கூட்டணி சிதைந்து வருவதாக விமர்சித்துள்ளார். EPS பரப்புரை பொய் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். மக்கள் மட்டுமின்றி, கூட்டணியில் இருப்பவர்களும் புரிந்துக் கொண்டதால், ஒவ்வொருவராக வெளியேறுகின்றனர். இதனால், அதிமுக கூட்டணி பலவீனப்பட்டு விட்டதாகவும் சாடினார்.

Similar News

News September 6, 2025

அதிமுக நலனுக்கு நல்லதல்ல: சசிகலா

image

அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். அவரை நீக்கியது சிறுபிள்ளைத்தனமானது எனத் தெரிவித்த அவர், இது கட்சியின் நலனுக்கு உகந்தது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவரும் இணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார். இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

News September 6, 2025

SCIENCE: நாம் கனவுகளை மறப்பது ஏன் தெரியுமா?

image

இரவில் தூங்கும்போது வந்த கனவை, நாம் காலையில் எழுந்ததும் மறப்பது ஏன் தெரியுமா? ஒரு கனவை உருவாக்குவது, அதை உணர்வது, என 2 வேலைகளையும் நமது மூளையே செய்கிறது. இதனால் கனவில் நாம் கவனிக்காமல் விடும் விஷயங்கள், தானாகவே நமக்கு மறந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அதோடு நமக்கு தேவைப்படாது எனக் கருதி, சில தகவல்களை நமது மூளை மறந்துவிடுமாம். நீங்கள் நேற்று கண்ட கனவு ஞாபகம் இருக்கா?

News September 6, 2025

அமைதி காக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்

image

செங்கோட்டையன் நேற்று மனம்திறந்து 10 நாள் கெடு விதிக்க, அதற்கு பதிலாக இன்று அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து <<17629139>>EPS நீக்கினார்<<>>. இதனால் அரசியல் களம் பரபரப்பில் இருந்தாலும், கட்சித் தொண்டர்கள் அமைதியாகவே உள்ளனர். வெளியிலுள்ள அதிருப்தியாளர்களை தவிர்த்து, அதிமுக முக்கிய தலைவர்களும் அமைதி காக்கின்றனர். கட்சிக்குள் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை எனில், செங்கோட்டையன் முடிவு என்னாகும்? உங்கள் கருத்து?

error: Content is protected !!