News November 18, 2024
பிரபுதேவாவையும் விட்டு வைக்காத நயன்தாரா

நயன்தாரா: beyond the fairy tale ஆவணப்படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அதில், நயன்தாரா பேசும் போது, எனக்கு எல்லாமே சினிமாதான், இனி நடிக்கக்கூடாது என்ற முடிவை நான் எடுக்கவில்லை. அந்நபரே சொன்னார். எனக்கு சாய்ஸே தரவில்லை. வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டேன். பின்னர் தவறான நபரை நம்பிவிட்டோமே என்ற கவலை இருந்ததாக கூறினார். இவர் பிரபுதேவாவை தான் சொல்கிறார் என்ற நெட்டிசன்கள் அடித்து பேசுகிறார்.
Similar News
News August 28, 2025
BREAKING: மூத்த அரசியல் தலைவர் கவலைக்கிடம்

தூய அரசியலுக்கு சொந்தக்காரரான நல்லக்கண்ணுவின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ள நல்லகண்ணுவின் உடல்நிலை நேற்று இரவு பின்னடைவை சந்தித்ததால், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News August 28, 2025
மலாய் மொழியில் ரீமேக்காகும் கைதி

LCU-வின் துவக்கப் புள்ளியான ‘கைதி’ படத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்தப் படம் ஏற்கெனவே ஹிந்தியில் ரீமேக்கான நிலையில், தற்போது மலாய் மொழியிலும் அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யப்படுகிறது. Kroll Azry இயக்கும் இப்படம், நவம்பரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஜப்பான் மொழியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தில் உங்களுக்கு பிடித்த சீன் எது?
News August 28, 2025
USA வரிவிதிப்பால் ₹3,000 கோடி வர்த்தகம் பாதிப்பு: CM ஸ்டாலின்

USA-வின் 50% வரிவிதிப்பால் தமிழகத்தின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜவுளித் துறையின் மையமான திருப்பூரில் ₹3,000 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தொழில் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.