News September 22, 2025
இன்று நவராத்திரி: இவற்றை கண்டிப்பாக பண்ணுங்க!

அம்பிகையை வீட்டிற்கு அழைத்து வரும் நவராத்திரி பண்டிகையில், செய்ய வேண்டிய சில காரியங்கள் உள்ளன *எப்போதும் இறை சிந்தனையிலேயே இருந்து, மனதையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் *தியானம், வழிபாடு ஆகியவற்றில் ஈடுபட வேண்டும் *கொலு வைத்தாலும், வைக்காவிட்டாலும் காலை & மாலையில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும் *முடிந்தவரை உடை, உணவு, பணம் ஆகியவற்றை கொடுத்து உதவலாம். SHARE IT.
Similar News
News September 22, 2025
தமிழகத்தில் 3 நாள்களுக்கு மழை வெளுக்கும்: IMD

வங்கக் கடலில் இன்றும், செப்.25-ம் தேதியும் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதில், 25-ல் உருவாகும் காற்றழுத்தம் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக ஆந்திரா – ஒடிசா இடையே கரையை கடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
நடிகை ராதிகா வீட்டில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகைகள் ராதிகா, நிரோஷாவின் தாயாருமான கீதா ராதா (86) நேற்று காலமானார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள், முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலிக்கு பிறகு 4 மணியளவில் இறுதி ஊர்வலம் தொடங்கும் என்றும் மாலை 5.30 மணிக்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
ஆசிய கோப்பையில் மீண்டும் IND vs PAK?

ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 3-வது முறையாக மோத மீண்டும் வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால், இந்திய அணி இறுதி போட்டியை எட்டி விடும். அதே போல, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டாலும், இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. இதனால், மீண்டும் ஒருமுறை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் வாய்ப்பு ஏற்படும்.