News October 22, 2025
NATIONAL ROUNDUP: பிஹாரில் 1,314 வேட்பு மனுக்கள் ஏற்பு

▶சபரிமலை கோயிலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று சாமி தரிசனம் ▶பிஹார் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தலில் 1,314 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு. ▶பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயணித்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் தகவல் ▶கேரளாவில் வெளுத்து வாங்க தொடங்கிய கனமழை; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.
Similar News
News October 22, 2025
BREAKING: 15 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

TN-ல் தொடர் மழை காரணமாக 14 மாவட்டங்களில் இன்று(அக்.22) பள்ளிகளுக்கு விடுமுறையாகும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி ஆகிய 15 மாவட்டங்களில் இதுவரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறையாகும்.
News October 22, 2025
ரோஹித், கோலிக்கு ஆஸி., தொடர் முக்கியம்: பாண்டிங்

ரோஹித் சர்மா, விராட் கோலி அடுத்த 2027 WC வரை விளையாடுவார்களா என்ற கேள்வி ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டே இருக்கிறது. இதனிடையே, WC வரை இருவரும் விளையாடுவார்களா என்பதை ஆஸ்திரேலியா தொடர் தீர்மானிக்கும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு சிறிய இலக்குகளை வைத்து இருவரும் பயணிப்பதே சிறப்பாக இருக்கும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
News October 22, 2025
4 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று(அக்.22) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், அந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ வார்னிங் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழை நேரத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.