News November 30, 2024
புயலால் கிழிந்த தேசியக் கொடி

புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் பறக்கும் தேசியக்கொடி கிழிந்தது. பலத்த மழை தொடர்வதால், கொடியை சரிசெய்யும் பணிகளை தொடங்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். மழை ஓரளவு குறைந்ததும் உடனடியாக தேசியக்கொடி இறக்கப்படும் என்றும், மழை முழுவதும் நின்ற பிறகு புதிய தேசியக் கொடி மீண்டும் ஏற்றப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 21, 2025
‘பரசுராம்புரி’யாக மாறிய உ.பி.யின் ஜலாலாபாத்

உ.பி.யின் ஜலாலாபாத் நகரம் ‘பரசுராம்புரி’ என பெயர்மாற்றம் செய்யப்படுகிறது. விஷ்ணுவின் அவதாரமான ’பரசுராம்’ ஜலாலாபாத்தில் பிறந்ததாக நம்பப்படுகிறது. எனவே, இந்நகரத்தின் பெயரை மாற்றக் கோரி உ.பி.யின் தலைமை செயலாளர் கடிதம் எழுதிய நிலையில், அதனை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுள்ளது. 1550-ல் முகலாயப் பேரரசர் ஜலால்-உத்-தின் முகமது அக்பரின் நினைவாக, இப்பகுதிக்கு ஜலாலாபாத் என பெயரிடப்பட்டு இருந்தது.
News August 21, 2025
தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு: NIA அதிரடி

PMK நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக 9 இடங்களில் நேற்று NIA சோதனை நடத்தியது. இதில், கொடைக்கானலில் பிரியாணி கடை நடத்தி வந்த இம்தாதுல்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட PFI அமைப்புடன் அவர் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவான 3 போலீஸ் அதிகாரிகளை தனது ஹோட்டலில் தங்க வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒருவர் மட்டும் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
News August 21, 2025
தவெகவுக்கும் தலைவலியான ஆம்புலன்ஸ்

பரப்புரைக்கு நடுவே நோயாளிகள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் அதன் டிரைவர் நோயாளியாக்கப்படுவார் என EPS பேசியது பெரும் சர்ச்சையானது. இதேபோல் தவெக மாநாட்டிலும் ஆம்புலன்ஸால் சர்ச்சை வெடித்துள்ளது. மாநாட்டுத் திடலுக்குள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் 4 தவெக தொண்டர்கள் திடலுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். தடுப்புக் கம்பிகள் மேல் குதித்தும் தொண்டர்கள் உள்ளே வருகின்றனர்.