News January 12, 2025
ஆளுநர் விழாவில் முதலில் தேசிய கீதம்!

முதலில் தேசிய கீதம் பாடப்படாததால் சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஆளுநர் ரவி வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார். முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள மேல் அவுரிவாக்கம் கிராமத்தில் ஆளுநர் ரவி கலந்துகொண்ட பொங்கல் விழாவில் முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.
Similar News
News January 13, 2026
பொங்கல்: மல்லிகைப்பூ விலை ₹6,000 குறைந்தது

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த சில நாள்களாக மல்லிகைப்பூ விலை தங்கத்திற்கு இணையாக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் புதிய உச்சமாக 1 கிலோ ₹12,000 வரை விற்பனையானது. இந்நிலையில், இன்று மதுரை, தோவாளையில் 1 கிலோ மல்லிகைப்பூ ₹4,000-₹6,000 வரை விற்பனையாகிறது. ஆனால், இதுவும் பெரிய விலை என மக்கள் புலம்புகின்றனர். 1 கிலோ முல்லை ₹2,500, பிச்சிப்பூ ₹2,000, கனகாம்பரம் ₹2,000, சம்பங்கி ₹150-க்கு விற்பனையாகிறது.
News January 13, 2026
கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல: டிரம்புக்கு பதிலடி

கிரீன்லாந்தை எப்படியாவது <<18833302>>வாங்கிவிடுவேன்<<>> என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார் டிரம்ப். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்த டென்மார்க் MEP ஆண்டர்ஸ் விஸ்டிசன், கிரீன்லாந்து 800 ஆண்டுகளாக டென்மார்க்கின் முக்கிய அங்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே, கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்ற அவர், மேடையிலேயே டிரம்ப்பை “F**k off” என அசிங்கமாகவும் திட்டியுள்ளார்.
News January 13, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <


