News April 23, 2025

அதிமுகவில் இணைந்த நாதக நிர்வாகிகள்

image

நாதக வட சென்னை மாவட்ட தலைவர் உள்பட நாதக நிர்வாகிகள் ஏராளமானோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் நெருங்குவதால், பலர் கட்சி மாறி வருகின்றனர். அந்த வரிசையில் நாதக வடசென்னை மாவட்ட தலைவர் அ. செல்வராஜ், மாவட்ட தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சு.பாண்டியன், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் சென்னையில் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Similar News

News December 21, 2025

காலை அலாரம் அடிச்ச அப்புறம் தான் எழுந்திருக்குறீங்களா?

image

பலரும் காலை அலாரம் அடித்த பிறகே, எழுந்து வேக வேகமாக கிளம்புவோம். ஆனால், அந்த காலை அலாரம் இதயப்பிரச்னை இருப்பவர்களுக்கு ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். திடீரென அதிக சத்தம் கேட்டு எழுந்தால், Blood Pressure அதிகரிக்கும். இது Cardiovascular அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி, இதய பிரச்னைகள் அதிகரிக்குமாம். இதனை, Morning Blood Pressure Surge என்கின்றனர். மெல்லிய இசையை அலாரமாக வைக்கலாம்.

News December 21, 2025

கூட்டணியில் புதிய முடிவு.. CM ஸ்டாலினுக்கு சிக்கல்

image

திமுக கூட்டணியில் இஸ்லாமியர்களுக்கு 16 தொகுதிகளை ஒதுக்குமாறு CM ஸ்டாலினிடம் வலியுறுத்துவோம் என IUML தேசிய தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார். இவற்றில் 5 தொகுதிகளை IUML கட்சிக்கு கேட்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, காங்., விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், கூடுதல் சீட்களை கேட்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது திமுகவுக்கு புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

News December 21, 2025

25 தலைகள், 50 கைகளுடன் உள்ள மகா சதாசிவமூர்த்தி!

image

கன்னியாகுமரி, சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் சிவனின் இந்த அதிசய ரூபத்தை தரிசிக்கலாம். மகா சதாசிவன் என்றழைக்கப்படும் இவர், 25 தலைகளும், 50 கைகளையும் கொண்டுள்ளார். இது சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒன்று. பிரபஞ்சத்தை வடிவமைக்கும் 25 தத்துவங்களைக் குறிக்க 25 தலைகளும், எல்லையற்ற விழிப்புணர்வைக் குறிக்க 50 கண்களும், படைப்பைத் தாங்கும் புனிதக் கருவிகளை தாங்கிய 50 கரங்களையும் சிவன் கொண்டுள்ளார்.

error: Content is protected !!