News April 23, 2025
அதிமுகவில் இணைந்த நாதக நிர்வாகிகள்

நாதக வட சென்னை மாவட்ட தலைவர் உள்பட நாதக நிர்வாகிகள் ஏராளமானோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் நெருங்குவதால், பலர் கட்சி மாறி வருகின்றனர். அந்த வரிசையில் நாதக வடசென்னை மாவட்ட தலைவர் அ. செல்வராஜ், மாவட்ட தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சு.பாண்டியன், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் சென்னையில் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
Similar News
News November 18, 2025
அதிமுகவையும் திமுகதான் காப்பாற்றணும்: மருது அழகுராஜ்

எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இப்போது இல்லை என மருது அழகுராஜ் கூறியுள்ளார். இப்போதிருக்கும் அதிமுக சில சமூகங்கள் சேர்ந்த சாதி அமைப்பாக மாறிவிட்டது என்ற அவர், சகோதர இயக்கமான அதிமுகவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு வந்திருக்கிறது என தெரிவித்துள்ளார். இதனால்தான் அதிமுகவை விட்டு வந்துவிட்டோமே என்ற வருத்தம் தனக்கு துளியும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.
News November 18, 2025
அதிமுகவையும் திமுகதான் காப்பாற்றணும்: மருது அழகுராஜ்

எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இப்போது இல்லை என மருது அழகுராஜ் கூறியுள்ளார். இப்போதிருக்கும் அதிமுக சில சமூகங்கள் சேர்ந்த சாதி அமைப்பாக மாறிவிட்டது என்ற அவர், சகோதர இயக்கமான அதிமுகவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு வந்திருக்கிறது என தெரிவித்துள்ளார். இதனால்தான் அதிமுகவை விட்டு வந்துவிட்டோமே என்ற வருத்தம் தனக்கு துளியும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.
News November 18, 2025
தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே ஆண் சடலம்

சென்னையில் உள்ள கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே முகத்தில் செலோடேப் சுற்றியபடி இளைஞர் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்தின் அருகில் கிடந்த பையில் இருந்த ஆவணங்களின் மூலம் இறந்து கிடந்தவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கலையரசன் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


