News April 23, 2025
அதிமுகவில் இணைந்த நாதக நிர்வாகிகள்

நாதக வட சென்னை மாவட்ட தலைவர் உள்பட நாதக நிர்வாகிகள் ஏராளமானோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் நெருங்குவதால், பலர் கட்சி மாறி வருகின்றனர். அந்த வரிசையில் நாதக வடசென்னை மாவட்ட தலைவர் அ. செல்வராஜ், மாவட்ட தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சு.பாண்டியன், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் சென்னையில் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
Similar News
News November 22, 2025
மெட்ராஸ் HC வாயில்கள் மூடல்.. ஏன் தெரியுமா?

மெட்ராஸ் HC-ன் அனைத்து வாயில்களும் நாளை இரவு 8 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் HC கட்டப்பட்டதால் அதன் வளாகத்தை வழிப்பாதையாக மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் வளாகத்தை மக்கள் உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக HC-ன் வாயில்கள் வருடத்தின் ஒரு நாள் மூடப்படுகின்றன. இது நவ. இறுதி வாரத்தில் பின்பற்றப்படுகிறது.
News November 22, 2025
847 பந்துகளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 847 பந்துகளில் முடிவுக்கு வந்தது. 1895-ல் நடந்த டெஸ்ட் 911 பந்துகளில் முடிந்தது. அதன்பிறகு, கடந்த 130 ஆண்டுகளில் விரைவாக முடிந்த டெஸ்ட் இதுதான். அதேபோல, குறைந்த நேரத்தில் இங்கி., அணி 2 இன்னிங்ஸ்களையும் முடித்த போட்டியும் இதுதானாம். இங்கி., பேட்ஸ்மென்கள் இந்த டெஸ்டில் 405 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டனர்.
News November 22, 2025
Delhi Blast: எலக்ட்ரீசியன் கைது

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக படாமலூ பகுதியை சேர்ந்த துபைஃல் நியாஸ் பட் என்பவரை ஜம்மூ காஷ்மீர் போலீஸ் கைது செய்துள்ளது. எல்க்ட்ரீசியனான நியாஸ் பட், டெல்லி தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களில் ஒருவராக கண்டறியப்பட்டுள்ளார். தற்கொலைப்படை பயங்கரவாதி உமர் பரூக்கும், நியாஸும் ஒரே பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே கைதான அடீல் அகமதுக்கு AK47 கொடுத்தாரா என போலீஸ் சந்தேகிக்கிறது.


