News September 15, 2024
கலை ஆற்றலை அருளும் நடராசர்

ஐம்பெரும் அம்பலங்களில் பொன்னம்பலமான தில்லை நடராசரை வழிபட்டால் பிறவிப் பிணிகள் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு. ஈசனின் ஆனந்த தாண்டவத்தை கண்ணால் கண்டு பதஞ்சலி முனிவர் முக்திப் பெற்ற ஆகாயத் திருத்தலமான இக்கோயிலுக்கு விரதமிருந்து சென்று, இறைவனை தொழுது, வில்வ இலை மாலை சாற்றி, தேவாரம் பாடி, தீபாராதனையில் பங்கேற்று வணங்கினால் கல்விச் செல்வமும், கலை ஆற்றலும் கிட்டும் என்பது ஐதிகம்.
Similar News
News November 21, 2025
‘சிக்கன் 65’ பெயர் வந்தது எப்படி தெரியுமா?

அசைவ பிரியர்களின் விருப்பமான உணவு ‘சிக்கன் 65’. அதை விரும்பி சாப்பிடும் பலருக்கும் அதன் பெயர் காரணம் தெரியாது. உண்மையில் இந்த பெயர் வந்தது தமிழகத்தில் இருந்து தான். 1965-ல் சென்னை புஹாரி ஹோட்டல் உரிமையாளர் AM புஹாரி தான், இதை முதலில் அறிமுகப்படுத்தினார். மசாலாவில் ஊறவைத்து பொறித்த கோழிக்கறியை புதிய டிஷ் ஆக அறிமுகம் செய்த அவர், அந்த ஆண்டை வைத்து ‘சிக்கன் 65’ என்று குறிப்பிட அது பிரபலமாகிவிட்டது.
News November 21, 2025
ஆப்கன் எல்லையில் பாக்., தாக்குதல்: 23 பேர் பலி

PAK-AFG இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஆப்கன் எல்லைக்கு அருகே இரண்டு தனித்தனி தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ளது. குர்ரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட TTP குழுவை சேர்ந்தவர்கள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 23 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது.
News November 21, 2025
குளிர்காலத்தில் இத கண்டிப்பா சாப்பிடுங்க!

குளிர்காலத்தில் உடல் மந்தமாக இருக்கும். எனவே, ஆற்றலை அதிகரிக்க சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். அதில் முக்கியமான ஒன்று வேர்க்கடலை என்கின்றனர் டாக்டர்கள் *இதில், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. *குடலுக்கு நல்லது. *எலும்புகளை வலுப்படுத்துகிறது. *கொலஸ்ட்ரால், சுகர் அளவை கட்டுப்படுத்தும். *சரும பாதுகாப்பு, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.


