News April 8, 2025
தேர்தல் களத்தை இப்போதே சூடாக்கும் நாதக வேட்பாளர்கள்

2026 சட்டமன்றத் தேர்தலில், நாதக சார்பில் 25 தொகுதிகளில் போட்டியிட முதற்கட்ட வேட்பாளர்களை சீமான் தேர்வு செய்துள்ளார். ஆயிரம் விளக்கு- களஞ்சியம், வேதாரண்யம்- இடும்பாவனம் கார்த்திக், கீழ்வேலூர்- கார்த்திகா, ஒரத்தநாடு- திருமுருகன், ராமநாதபுரம்- அனீஸ் பாத்திமா, ஸ்ரீரங்கம் – ராஜேஷ், மடத்துக்குளம் – அபிநயா, திருவள்ளூர்- செந்தில்குமார் உள்ளிட்டோர் வேட்பாளராக தேர்வாகி, களத்தில் செயல்பட தொடங்கியுள்ளனர்.
Similar News
News December 4, 2025
அதிமுக கூட்டணியில் இணையும் அன்புமணி?

அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணி திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தொடர்ச்சியாக திமுக அரசை சாடும் அன்புமணி, தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்காமல் உள்ளார். இந்நிலையில், தான் நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்தில் பங்கேற்க EPS-க்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது கூட்டணிக்கான சமிக்ஞை ஆக கருதப்படுகிறது. எனினும் ராமதாஸுடனும் ADMK பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் பரவுகின்றன.
News December 4, 2025
‘டியூட்’ சர்ச்சை.. இழப்பீடு பெற்ற இளையராஜா

‘டியூட்’ படத்தில் கருத்த மச்சான், நூறு வருஷம் உள்ளிட்ட பாடல்களை, தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாக மெட்ராஸ் HC-ல் இளையராஜா வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கியதாகவும், படத்தின் டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் பதிலளித்துள்ளது. இருதரப்பும் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதால், டியூட்-ல் மீண்டும் அப்பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
News December 4, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை
▶குறள் எண்: 539
▶குறள்:
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
▶பொருள்: மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.


