News March 4, 2025
மரண தண்டனை தராவிட்டால் தற்கொலை: நர்வால் தாயார்

காங்கிரஸ் பிரமுகர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை தரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதாக நர்வாலின் அம்மா கூறியுள்ளார். போலீசாரின் நடவடிக்கையில் தனக்கு திருப்தியில்லை என்றும், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு தர முடியாவிட்டால் தனது தற்கொலைக்கு ஹரியானா அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2025
Driver போதையில் இருந்தாலும், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு

விபத்தை ஏற்படுத்திய டிரைவர் குடிபோதையில் இருந்தாலும், இறந்தவரின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் 2017ல் சாலையில் நடந்துசென்ற ராஜசேகர் என்பவர் வேன் மோதி உயிரிழந்தார். ஓட்டுநர் போதையில் இருந்ததால் காப்பீட்டு நிபந்தனைகளை மீறுவதாக கூறி, இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு மறுக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2025
ரோஹித் சர்மாவுக்கு ஆதரவு கரம் நீட்டிய யுவராஜ் சிங் தந்தை

ரோஹித் உருவத்தை விமர்சித்த ஷாமா முகமது பேச்சுக்கு யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களின் உருவ அமைப்பை அவமதிக்கும் விதமாக இதுவரை யாரும் பேசியது இல்லை எனவும், PAK-இல் மட்டுமே இப்படி விமர்சிப்பார்கள் என்றும் கூறியுள்ளார். வீரர்களை அவமதிக்கும் இத்தகைய பேச்சுக்கு ஷாமா மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் சாடியுள்ளார்.
News March 4, 2025
தமிழகம் மீது மொழித் திணிப்பு ஏன்? முதல்வர் கேள்வி

இருமொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெளிவாக விளக்கி உள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் நிலையில், மொழித் திணிப்பு ஏன்?, மும்மொழிக் கொள்கையால் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் ஏதாவது ஒன்றை கூற முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர், ஏகாதிபத்திய மனோபாவம் கொண்ட சிலரது வசதிக்காக தமிழ்நாட்டின் மீதான மொழித் திணைப்பை ஏற்கமாட்டோம் என கூறியுள்ளார்.