News November 23, 2024
நினைத்ததும் அருள் தரும் நரசிம்மர்

திருமாலின் தசாவதாரங்களில் மிகவும் சிறப்பான தனித்துவமான அவதாரம் நரசிம்ம அவதாரம் தான். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார், அசைக்க முடியாத பக்தி மற்றும் நம்பிக்கை உடைய பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு தெய்வம் ஓடி வரும் என்பதை உலகம் அறிய செய்த அவதாரம். நாளை என்ற சொல்லே தன்னிடம் கிடையாது என பக்தர்கள் வேண்டிய உடனேயே வந்து அருள் செய்ய கூடிய தெய்வமாக நரசிம்ம மூர்த்தி விளங்குகிறார்.
Similar News
News November 14, 2025
அடுத்தடுத்து ஹிட் அடிப்பாரா சிவகார்த்திகேயன்?

‘SK24′ பட ஷூட்டிங் டிசம்பர் 2-வது வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபி சக்கரவர்த்தி இயக்கும் இப்படத்தில், ‘பராசக்தி’-க்கு (SK25) பிறகு ஸ்ரீலீலா, SK உடன் இணைந்து ஹீரோயினாக நடிக்கவுள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம் பக்கா கமர்ஷியலாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், வெங்கட்பிரபு இயக்கும் ‘SK26′ படத்தின் கதையும் சிவாவுக்கு நன்றாக அமையும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
News November 14, 2025
ஊழல் வழக்கில் அம்பானி: மும்பை HC நோட்டீஸ்

இந்தியாவின் டாப் பணக்காரரான முகேஷ் அம்பானி ஊழல் வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளார். கிருஷ்ணா கோதாவரி படுகையில், ₹12,000 கோடி மதிப்புள்ள ONGC எரிவாயுவை சட்டவிரோதமாக அம்பானி திருடியதாக கூறி, கிரிமினல் வழக்குப்பதியவும், சிபிஐ விசாரணை கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த மும்பை HC, சிபிஐ மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், நவ.18-ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
News November 14, 2025
சுற்றுச்சூழல் நாயகி காலமானார்!

கர்நாடகாவை சேர்ந்த புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், பத்மஸ்ரீ சாலுமரத திம்மக்கா காலமானார். ‘மரங்களின் அன்னை’ என கர்நாடக மக்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், சுமார் 80 ஆண்டுகளாக கணவருடன் சேர்ந்து, 8,000-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்துள்ளார். 114 வயதான அவர், வயது மூப்பு மற்றும் சுவாச பிரச்னை காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். வணங்குகிறோம் தாயே!


