News November 23, 2024
நினைத்ததும் அருள் தரும் நரசிம்மர்

திருமாலின் தசாவதாரங்களில் மிகவும் சிறப்பான தனித்துவமான அவதாரம் நரசிம்ம அவதாரம் தான். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார், அசைக்க முடியாத பக்தி மற்றும் நம்பிக்கை உடைய பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு தெய்வம் ஓடி வரும் என்பதை உலகம் அறிய செய்த அவதாரம். நாளை என்ற சொல்லே தன்னிடம் கிடையாது என பக்தர்கள் வேண்டிய உடனேயே வந்து அருள் செய்ய கூடிய தெய்வமாக நரசிம்ம மூர்த்தி விளங்குகிறார்.
Similar News
News December 3, 2025
புடின் வருகை.. என்னவெல்லாம் நடக்கலாம்?

ரஷ்ய அதிபர் புடின் நாளை இந்தியா வருகிறார். அப்போது ஆயுத உற்பத்தி, அணுசக்தி, டெக் என பல துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரஷ்யாவின் அதிநவீன S-500 வான் பாதுகாப்பு அமைப்பு, Su-57 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போடப்படும் என கூறப்படுகிறது. அதேபோல், வர்த்தகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 3, 2025
பண மழை கொட்ட போகும் 3 ராசிகள்

வரும் டிச.6-ம் தேதி, புதன் பகவான் விருச்சிக ராசியில் பெயர்ச்சியாவார். இதனால் பின்வரும் 3 ராசியினர் அதிக நன்மைகள் பெறுவர்: *விருச்சிகம்- பணியில் பதவி, சம்பள உயர்வு, தொழிலில் லாபம் கிடைக்கும். *திருமண வாழ்க்கை சிறக்கும். *மகரம்- வருமானம் கணிசமாக அதிகரிக்கும், தொழிலில் லாபம் கூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உண்டு. *கும்பம்- வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.
News December 3, 2025
இலவச லேப்டாப் திட்டத்தில் குளறுபடி: நயினார்

தமிழகத்தில் பல லட்சம் மாணவர்கள் உள்ள நிலையில், வெறும் ₹10 லட்சம் பேருக்கு மட்டும் லேப்டாப் வழங்குவது ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். எதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என கேட்ட அவர், பகுத்தறிவு பேசிக்கொண்டு திரைமறைவில் எதற்கு இத்தனை பாகுபாடுகள் எனவும் சாடியுள்ளார். தேர்தலுக்காக அதிமுகவின் திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.


