News June 28, 2024

எண்ணிய காரியங்கள் ஈடேற்றும் நந்தீஸ்வரர்

image

இந்தியாவின் 2ஆவது பெரிய நந்தி சிலை அமைந்துள்ள திருத்தலம் பெங்களூரு தொட்ட பசவண குடி கோயிலாகும். பிரதோஷ நாளில் விரதமிருந்து, இக்கோயிலுக்குச் சென்று சைவ சமயத்தின் முதல் குருவாக கருதப்படும் நந்தீஸ்வரருக்கு வெண்ணெய் அபிஷேகம் செய்து, அருகம்புல் மாலை சாற்றி, அவல் பால் அன்னம் படைத்து, நந்து ஸ்துதி பாடி, 16 தீபமேற்றி, நிலக் கடலை காணிக்கை செலுத்தி வணங்கினால் எண்ணிய காரியங்கள் ஈடேறும் என்பது ஐதீகம்.

Similar News

News December 6, 2025

காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்

image

காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் சக்திவேல் வீரமரணம் அடைந்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டம், சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தை சேர்ந்தவர். காஷ்மீர் எல்லைப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போது PAK பயங்கரவாதிகளுடனான சண்டையில் சக்திவேல் வீரமரணம் எய்தினார். அவரது உடல், சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தாய்நாட்டை காத்த சக்திவேலுக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

News December 6, 2025

விஜய் தொகுதியில் போட்டியிடுவேன்.. அறிவித்தார்

image

2026 தேர்தலில் விஜய்க்கு எதிராக களம் காண்பேன் என NTK கொள்கைப்பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார். விஜய் போட்டியிடும் தொகுதியின் விவரம் வெளியான பிறகு, தானும் அதே தொகுதியில் போட்டியிடுவதற்கு சீமானிடம் அவர் அனுமதி கேட்டுள்ளதாக NTK வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் காரணமாகவே, நேற்று வெளியான <<18478564>>NTK முதற்கட்ட வேட்பாளர்கள்<<>> பட்டியலில் அவரது பெயர் இல்லை என கூறப்படுகிறது.

News December 6, 2025

பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. ஆட்சியர் அறிவித்தார்

image

சென்னையில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிச.2-ல் மழை காரணமாக அளிக்கப்பட்ட விடுப்பை ஈடு செய்யும் வகையில் பள்ளிகள் செயல்படவுள்ளன. புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. டிச.2-ல் செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!