News June 28, 2024

எண்ணிய காரியங்கள் ஈடேற்றும் நந்தீஸ்வரர்

image

இந்தியாவின் 2ஆவது பெரிய நந்தி சிலை அமைந்துள்ள திருத்தலம் பெங்களூரு தொட்ட பசவண குடி கோயிலாகும். பிரதோஷ நாளில் விரதமிருந்து, இக்கோயிலுக்குச் சென்று சைவ சமயத்தின் முதல் குருவாக கருதப்படும் நந்தீஸ்வரருக்கு வெண்ணெய் அபிஷேகம் செய்து, அருகம்புல் மாலை சாற்றி, அவல் பால் அன்னம் படைத்து, நந்து ஸ்துதி பாடி, 16 தீபமேற்றி, நிலக் கடலை காணிக்கை செலுத்தி வணங்கினால் எண்ணிய காரியங்கள் ஈடேறும் என்பது ஐதீகம்.

Similar News

News December 3, 2025

இந்த நாள்களை மறந்துடாதீங்க!

image

விஜய் ஹசாரே தொடரில் வரும் 24-ம் தேதி ஆந்திரா, 26-ம் தேதி குஜராத், ஜனவரி 6-ம் தேதி ரயில்வே ஆகிய அணிகளுக்கு எதிராக டெல்லி வீரராக கோலி களமிறங்குகிறார். கடைசியாக 2010-ம் ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் கோலி விளையாடி இருந்தார். முன்னதாக, 2027 ODI WC-ல் விளையாட உடற்தகுதி & ஃபார்மை தக்கவைத்து கொள்ள, உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என அவருக்கு BCCI அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 3, 2025

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ₹90.14 ஆக சரிவு

image

டாலருக்கு($) நிகரான ரூபாயின்(₹) மதிப்பு வரலாறு காணாத வகையில் ₹90.14 ஆக சரிந்துள்ளது. கடந்த ஜனவரியில் ₹86.45 ஆக இருந்த ₹ மதிப்பானது பல மாதங்களாக பெரிய அளவில் மாற்றமின்றி நீடித்தது. ஆனால், தற்போது USA வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் சரிவை கண்டுள்ளது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி பொருள்களுக்கான செலவு இந்தியாவில் பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News December 3, 2025

TN-ல் இந்தி கற்க முடியவில்லை: எல்.முருகன்

image

தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலை காரணமாக தன்னால் இந்தி கற்க முடியவில்லை என எல்.முருகன் கூறியிருக்கிறார். இதனால் டெல்லி சென்ற பிறகுதான் இந்தி கற்றதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் அந்த வாய்ப்பு தனக்கு மறுக்கப்பட்டது ஏன் என கேட்டுள்ளார். மேலும் இந்தி கற்பது தன்னுடைய உரிமை எனவும் ஆனால், மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கிறது என்று கூறி தமிழகம் அதனை எதிர்க்கிறது என்றும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!