News June 28, 2024
எண்ணிய காரியங்கள் ஈடேற்றும் நந்தீஸ்வரர்

இந்தியாவின் 2ஆவது பெரிய நந்தி சிலை அமைந்துள்ள திருத்தலம் பெங்களூரு தொட்ட பசவண குடி கோயிலாகும். பிரதோஷ நாளில் விரதமிருந்து, இக்கோயிலுக்குச் சென்று சைவ சமயத்தின் முதல் குருவாக கருதப்படும் நந்தீஸ்வரருக்கு வெண்ணெய் அபிஷேகம் செய்து, அருகம்புல் மாலை சாற்றி, அவல் பால் அன்னம் படைத்து, நந்து ஸ்துதி பாடி, 16 தீபமேற்றி, நிலக் கடலை காணிக்கை செலுத்தி வணங்கினால் எண்ணிய காரியங்கள் ஈடேறும் என்பது ஐதீகம்.
Similar News
News September 18, 2025
கடவுள் தொடர்பான வழக்கு: நீதிபதியின் கருத்தால் சர்ச்சை

ம.பி.யில் உள்ள ஜவாரி கோயிலில் சேதமடைந்த விஷ்ணு சிலையை மீட்க கோரி SC-ல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த CJI பி.ஆர்.கவாய், இவ்வழக்கு விளம்பரத்துக்காக தொடரப்பட்டது எனவும், அவ்வளவு பெரிய விஷ்ணு பக்தராக இருந்தால் சிலையை சீரமைக்க உங்கள் கடவுளிடமே கேளுங்கள் என மனுதாரரிடம் தெரிவித்துள்ளார். இவருடைய பேச்சு மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
News September 18, 2025
₹12 ஆயிரம் போட்டால் ₹40 லட்சம் கிடைக்கும் மாஸ் திட்டம்!

போஸ்ட் ஆபீஸின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் (PPF) மூலம் மாதம் ₹12,500 முதலீடு செய்தால் 15 ஆண்டுகள் கழித்து ₹40.68 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். அதாவது, ஒவ்வொரு மாதமும் ₹12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் ₹22.5 லட்சம் இருக்கும். அத்துடன், அரசின் 7.1% வட்டி விகிதத்தை சேர்த்தால் ₹40.68 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்தில் இணைய போஸ்ட் ஆபீஸுக்கு செல்லுங்கள். SHARE.
News September 18, 2025
256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு: அண்ணாமலை

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால் அவற்றை கைவிட அரசு முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகிருப்பதாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக கருணாநிதியின் சிலை வைத்தது மட்டும்தான் எனவும் விமர்சித்துள்ளார்.