News June 28, 2024

எண்ணிய காரியங்கள் ஈடேற்றும் நந்தீஸ்வரர்

image

இந்தியாவின் 2ஆவது பெரிய நந்தி சிலை அமைந்துள்ள திருத்தலம் பெங்களூரு தொட்ட பசவண குடி கோயிலாகும். பிரதோஷ நாளில் விரதமிருந்து, இக்கோயிலுக்குச் சென்று சைவ சமயத்தின் முதல் குருவாக கருதப்படும் நந்தீஸ்வரருக்கு வெண்ணெய் அபிஷேகம் செய்து, அருகம்புல் மாலை சாற்றி, அவல் பால் அன்னம் படைத்து, நந்து ஸ்துதி பாடி, 16 தீபமேற்றி, நிலக் கடலை காணிக்கை செலுத்தி வணங்கினால் எண்ணிய காரியங்கள் ஈடேறும் என்பது ஐதீகம்.

Similar News

News November 5, 2025

மறைந்த தமிழ் நடிகர் .. கண்ணீரில் குடும்பம்

image

கமலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை ‘நாயகன்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. திரையரங்கில் கமல் பட ரிலீஸ் கொண்டாட்டம் என்பது ரோபோ சங்கர் இல்லாமல் முழுமையாகாது. ரோபோ சங்கர் மறைந்துபோனாலும், அவருக்காக நாயகன் பட ரீ-ரிலீஸூக்கான முதல் டிக்கெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை கேட்டு கண்ணீர் விடும் அவரின் குடும்பத்தினர், ரோபோ சங்கர் தற்போது இருந்திருந்தால், திருவிழா போல் கொண்டாடி இருப்பார் என கூறுகின்றனர்.

News November 5, 2025

நியூயார்க் மேயரான இந்திய இயக்குநரின் மகன்!

image

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோக்ரான் மம்தானி (34), நியூயார்க் நகரின் மேயராக தேர்வாகியுள்ளார். நியூயார்க் நகரின் இளம் மேயர் என்ற பெருமையை பெற்ற அவர், பிரபல திரைப்பட இயக்குநர் மீரா நாயரின் மகனாவார். ஒடிசாவைச் சேர்ந்த மீரா நாயர், ஹாலிவுட் நட்சத்திரம் டென்சல் வாஷிங்டன் நடித்த சலாம் பாம்பே (1988), மிஸ்ஸிசிப்பி மசாலா (1991) உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார்.

News November 5, 2025

சிறுபான்மை நலத்துறை அமைச்சரான Ex.கிரிக்கெட்டர்

image

தெலங்கானா அமைச்சராக பதவியேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. MLA தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அசாருதீனை கடந்த ஆகஸ்ட் மாதமே சட்ட மேலவை உறுப்பினராக பரிந்துரை செய்த நியமனத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை. 1984 முதல் 2000-ம் ஆண்டு வரை கிரிக்கெட்டில் அசத்திய இவர், 2009- 2014 வரை MP ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!