News August 25, 2024
காற்று வீசும் திசை&வேகத்திற்கு ஏற்ப வைத்துள்ள பெயர்கள்

*தெற்கிலிருந்து வீசுவது ‘தென்றல்காற்று’
*வடக்கிலிருந்து வீசுவது ‘வாடைக் காற்று’
*கிழக்கிலிருந்து வீசுவது ‘கொண்டல் காற்று’
*மேற்கிலிருந்து வீசுவது ‘மேலைக் காற்று’
*6 KM வேகத்தில் வீசினால் ‘மென்காற்று’
*6-11 KM – இளந்தென்றல் *12-19 KM – தென்றல்
*20-29 KM-புழுதிக்காற்று *30-39 KM-ஆடிக்காற்று
*100 KM – கடுங்காற்று *101-120 KM – புயற்காற்று
*120 KMக்கு மேல் வீசினால் சூறாவளிக் காற்று.
Similar News
News February 1, 2026
விழுப்புரம் அருகே அதிரடி கைது!

செஞ்சி ரோட்டில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதன் பெயரில் போலீசார் நேற்று (ஜன.31) பிற்பகல், செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். இதில், அவர் 100 போதை மாத்திரைகள், 5 ஊசிகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், செஞ்சி அடுத்த கப்பை கிராமத்தை சேர்ந்த அன்புச்செல்வன்,என தெரியவர அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
News February 1, 2026
அதிமுகவில் அடுத்தடுத்து இணைந்தனர்.. CM அதிர்ச்சி

தேர்தல் நெருங்கும் நிலையில் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் பிரதான கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திமுக, OPS ஆதரவாளர்கள், நாதக போன்ற கட்சிகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். குறிப்பாக, இந்த கட்சி மாற்றம் கொங்கு மண்டலத்தில் நடப்பதால், அப்பகுதியை கைப்பற்ற வியூகம் வகுக்கும் CM ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
News February 1, 2026
குழந்தைகளின் நேரத்தை திருடும் ஸ்மார்ட் போன்

குழந்தைகளின் ஸ்மார்ட் போன் பயன்பாடு குறித்து சமீபத்தில் வெளியான ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது. அதன்படி 14- 16 வயதான 76% குழந்தைகள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரீல்ஸ், கேமிங், சாட்டிங் என தினந்தோறும் 3- முதல் 6 மணி நேரத்தை செல்போனில் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் தூக்கம், சிந்தனை திறன், மனவலிமை உள்ளிட்டவற்றை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.


