News March 17, 2024
நாமக்கல்: வழிகாட்டு நெறிகள் விளக்க கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா தலைமையில் வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் வழிகாட்டு நெறிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிகள் மூலம் பொதுத் தேர்தலை சுமூகமாகவும், ஆரோக்கியமாகவும் நடத்திட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Similar News
News October 23, 2025
நாமக்கல்: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 23, 2025
முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.10 சரிவு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற, முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக சரிவடைந்து உள்ளது. அதேபோல் கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலை, கிலோவுக்கு ரூ. 3 குறைக்கப்பட்டு ரூ. 97 ஆக விற்பனையாகி வருகின்றது.
News October 23, 2025
இடி, மின்னல் நேரங்களில் செல்போனில் பேசக்கூடாது!

நாமக்கள்: பள்ளிப்பாளையம் பகுதிகளில் இடி, மின்னல் நேரங்களில் பொதுமக்கள் செல்போனில் பேசுவது தவிர்க்க வேண்டுமென மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில், மின்சாரம் தடைபட்டால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்களின் பாதுகாப்பே முதன்மை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்,” என மின்வாரிய உதவி பொறியாளர் சச்சிதானந்தம் தெரிவித்தார்.