News June 25, 2024
கல்லூரியில் “நல்லோசை” பள்ளிகளில் “கற்றல் இனிதே”

கல்லூரியில் “நல்லோசை” பள்ளிகளில் “கற்றல் இனிதே” என்ற திட்டம் தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரி விடுதிகளில் பள்ளி/கல்லூரி நேரத்திற்கு பிறகு மாணவ, மாணவிகள், கலை, அறிவியல், விளையாட்டு, தகவல் தொழில்நுட்பம், மென் மற்றும் பணி திறன்களில் முழுமையான திறனை வளர்த்துக் கொள்ள உதவும் வகையில், திறன் சார்ந்த பட்டறைகள், போட்டிகள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
Similar News
News November 28, 2025
2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரைநாள் லீவு!

‘டிட்வா’ புயல் எதிரொலியால் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ.28) அரைநாள்(மதியம்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
₹40,000 சம்பளத்தில் வேலை.. APPLY NOW!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: B.E/B.Tech, B.Pharm. வயது வரம்பு: 40. தேர்வு முறை: Written Test, Interview, Document Verification. சம்பளம்: ₹42,478. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.25. விருப்பமுள்ளவர்கள் <
News November 28, 2025
ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வது உறுதி: செங்கோட்டையன்

2026 தேர்தலில் தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும், ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வது உறுதி எனவும் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள மேலும் சிலர் தவெகவில் இணைய உள்ளதாக பரவும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, விரைவில் அதற்கான விடை கிடைக்கும் என சூசகமாக பதில் அளித்துள்ளார்.


